அறுபதாம் குறுவை நெல் அரிசி

விவசாயிகளுக்கு விருப்பமான நெல் – அரிசி – அறுபதாம் குறுவை அரிசி

60 – 75 நாட்களில் நல்ல ஒரு மகசூலை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான ரகம் இந்த பாரம்பரிய அறுபதாம் குறுவை அரிசி ரகம். அதிலும் இதன் சிறப்பு மாணாவரியில் கிடைக்கக்கூடிய நீரிலேயே செழிப்பாக வளரக்கூடிய நெல் ரகமாகும். பொதுவாக நெல் விளைய தண்ணீரை தேக்குவதுண்டு ஆனால் இந்த நெல்லுக்கோ அது தேவையில்லை.

சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்

ஒரு ஆண்டுக்கு ஐந்து போகங்கள் என இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இந்த நெல்லை விதைத்து அறுவடை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளிக்கக்கூடிய ஒரு சிறந்த ரகமாகவும் இது உள்ளது. குறைந்த நாட்களில் நல்ல மகசூலை அளிப்பதால் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்ற ரகம். அறுபது நாட்களில் விளையக்கூடிய இந்த ரகத்தை நேரடி விதைப்பு மற்றும் நடவு முறையிலும் கூட பயிர் செய்யலாம். இதன் அரிசி நடுத்தரமான ரகம் (சன்னமும் இல்லை, மோட்டாவும் இல்லை), இதன் அரிசி சிகப்பு நிறம்.

எலும்புகளுக்கு வலுவூட்டும் அரிசி

உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கும் எலும்புகளுக்கும் நல்ல ஒரு பலத்தையும் வலுவையும் அளிக்கக் கூடிய சிறந்த ஒரு பாரம்பரிய சிகப்பரிசி ரகம். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் ஒரு அற்புதமான பயிராகும். குறைந்த நாட்களில், குறைந்த செலவில் கால்நடைகளுக்கும் தரமான உணவை அளிக்க உதவும். இந்த ரகத்தை மாணவர்கள் கூட பயிர் செய்ய முடியும்.

ஒட்டுரகத்திற்கு சவாலான அரிசி

இன்று இருக்கக்கூடிய நவீன ஒட்டுரக அரிசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடிய ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி இது என்று கூட சொல்லலாம். நவீன ஒட்டு ரகங்கள் குறைந்த காலத்திலேயே விளைச்சலை கொடுக்கக்கூடியது அதைவிட குறைந்த காலத்தில் விளைச்சலை அளிப்பதும் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் இந்த ரகத்திற்கு ஈடுஇணையே இல்லை.

மாணாவரியிலும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்

மாணாவரியில் விளையக்கூடிய இந்த நெல் ரகத்தை கோடைகாலத்தில் சிறப்பாக மண்பானை தண்ணீரிலேயே வளர்க்க முடியுமென்றால் நம்ப முடிகிறதா? நம் முன்னோர்கள் 2 மாதத்தில் விளையக்கூடிய இந்த நெல் ரகத்திற்கு மண்பானை தண்ணீர் விட்டு கோடைகாலத்தில் வளர்த்து வந்துள்ளனர். அதுமட்டுமல்ல ஓட்டடையான் என்று சொல்லக்கூடிய மற்றொரு பாரம்பரிய நெல்லுக்கு ஊடுபயிராகவும் இந்த அறுபதாம் குறுவையை பயிர் செய்து வந்துள்ளனர்.

அறுபதாம் குறுவையில் என்னென்ன செய்யலாம்

இந்த அறுபதாம் குருவை அரிசியில் சோறு சமைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்டது இந்த பாரம்பரிய அரிசி. பத்தியம் இருபவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இந்த அறுபதாம் குறுவை அரிசியை கஞ்சி வைத்துக் கொடுக்க விரைவில் உடல் பலப்படும்.

பலகாரங்களுக்கும் நல்ல சுவையை அளிக்கும் அரிசி. குறிப்பாக சிகப்பரிசியான இந்த அறுபதாம் குறுவை புட்டு, இடியப்பம், உளுந்தஞ்சோறு, கொழுக்கட்டை என உணவுகளை தயாரித்து உண்டால் மீண்டும் மீண்டும் ருசிக்கத் தோன்றும்.

This image has an empty alt attribute; its file name is red-rice-puttu-recipe-in-tamil-arubathaam-kuruvai-arisi-puttu-traditional-rice-parambariya-arisi-sigapparisi-puttu.jpg

மதிப்புக் கூட்டுதல்

விவசாயிகள் எளிமையாக இரண்டு மாதத்தில் இந்த ரகத்தை பயிர்செய்து, அரிசியாக்கி அதனை நேரடியாகவும் விற்பனைக்கும் அனுப்பலாம் அல்லது இந்த அரிசியை மாவாக்கி, அறுவதாம் குறுவை சிகப்பரிசி மாவினையும் சுலபமாக விற்கலாம். இதனால் சத்தான பலகாரங்கள் செய்ய விரும்பும் வாடிக்கையாளரும் பயனடைவார், விளையவைத்த விவசாயிக்கும் லாபம் அதிகரிக்கும்.

அறுபதாம் குறுவை பயன்கள்

விளக்கமான பயன்களை தெரிந்துக்கொள்ள அறுபதாம் குருவை அரிசியைப் பற்றியும் அதன் சிறப்புகளையும் முதலில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
  • எலும்புகளுக்கு வலுவளிக்கும்.
  • உடல் பலத்தை அதிகரிக்கும்.
  • இருதயத்தை பாதுகாக்கும்.
  • வளர்சிதை மற்றதை சீராக்கும்.
  • மூட்டுகளுக்கு பலமளிக்கும்.
  • இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • மலச்சிக்கலை போக்கும்.
  • சூரிய ஒளி வைட்டமின் சத்துக்களை எளிதாக பெற உதவும்.
(1 vote)