பிரமிட் மருத்துவம்

பிரமிட், பழைய உலகத்தின் ஏழு அதிசயங்களில் பழமையானது. இன்றும் அழியாமலிருப்பதும் எகிப்திலுள்ள கீசா என்ற இடத்திலிருக்கும் பெரிய பிரமிடாகும். சுமார் 4500 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்ட பிரமாண்டம் இது. அது மட்டுமன்றி இந்த பிரமிடின் ஆற்றல் இன்றைய விஞ்ஞானிகளை அயர வைத்திருக்கிறது. மானிட வரலாற்றில் சமீப காலம் வரை இவ்வளவு பெரிய கட்டடம் பூமியில் எங்கும் எழுப்பப்படவில்லை என்பது மற்றொரு சிறப்பு.

எகிப்து பிரமிடின் உயரம் சுமார் 450 அடி. உள் பரப்பு 14 ஏக்கர். 90 மில்லியன் கன அடி கற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய எம்பயர் ஸ்டேட் கட்டடம் போல் 30 கட்டடம் இந்த பிரமிடை வைத்துக் கட்டலாம் என்ற அளவு பிரம்மாண்டமானது. இதை விடப் பெரிய அதிசயம், உலகத்தின் மொத்த நிலப்பரப்பின் நட்டநடு மையத்தில் பிரமிட் அமைந்துள்ளது. 500 மைல்களுக்கு கற்களே இல்லாத பாலைச் சமவெளியில் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு விஞ்ஞான ரீதியாகத் திட்டமிட்டு இதைக் கட்டியது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பிரமிடின் மகத்துவம் அதன் பிரமாண்டத்தில் மட்டுமில்லை. அதன் நோய் தீர்க்கும் ஆற்றலிலும் உள்ளது. எகிப்திய பிரமிடின் வடிவை அப்படியே சிறியதாக்கி நாம் வீட்டில் தயாரித்துப் பல நோய்களை வியத்தக்க விதமாகக் குணப்படுத்தலாம். உலகெங்கும் பிரமிடின் குணமாக்கும் தன்மை பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகிறது. சோவியத்தில் உள்ள பல்கலைக்கழகம், பிரமிட் ஆய்வுத்துறை என்றொரு தனித்துறையையே நிறுவியுள்ளது.

பிரமிடின் பயன்கள்

  • பிரமிடிற்குள் ஆழ்நிலை தியானம் செய்தால், சிந்தனை வேகம், விழிப்புணர்ச்சி புலன் உணர்வுகள் கூர்மையாகும்.
  • மன அமைதி, மன உளைச்சல் தீரும்.
  • பிரமிடில் இருக்க புத்துணர்ச்சி ஏற்படும்.
  • கடும் ஒற்றைத் தலைவலிபறக்கும்.
  • பிரமிடைத் தலைக்கு மேலே வைத்து உறங்கினால் புத்துணர்வு ஏற்படும்.
  • முடி உதிர்வு குறைந்து, தலைமுடி வேகமாக வளரும்.
  • சின்னக் குழந்தைகளின் அடமும் முரட்டுத்தனமும் பிரமிடில் இருக்க குறைந்து அவர்கள் அமைதிப்படுவர்கள்.
  • இரத்தக்கசிவு, வலிகள், கண் பார்வை, காது மந்தம் சீராகும்.
    செழிப்பு ஏற்படும்.
  • பிரமிடிற்குள் காய்கறி, பழம், மாமிசம் வைத்தால் பல நாட்கள் கெடுவதில்லை.
  • பாக்டீரியாக்கள் பிரமிடில் வளர் முடியாது.
  • பழச்சாற்றில் உள்ள கசப்பு நீங்கும்.
  • காபியின் கசப்பு குறையும்.
  • திறந்த அமைப்புள்ள பிரமிடிற்குள் வளர்க்கப்படும்
  • தாவரங்கள் 150% அதிக வளர்ச்சி பெறும்.
  • வைட்டமின்களின் சக்தி அதிகரிக்கும்.
  • குழாய் நீரை இதற்குள் இரண்டு வாரம் வைத்தால், அருவி நீரைப் போல புது வெள்ளமாகச் சுவைக்கும்.
  • வீட்டுப் பிராணிகள் பிரமிடில் நுழைய மிகவும் ஆசைப்படும். ஈக்கள், பூச்சிகள் பிரமிடை வெறுத்து ஒதுக்கும்.
  • மழுங்கிய பிளேடுகளை பிரமிடின் உள்ளே வைத்தால் கூர்மையாகும் என்கின்றனர்.
(2 votes)