திட உணவுகள்

வழிவழியாய் நம் மூதாதையர்கள் வழியில் வந்த நாம் பயிறு வகைகள், நெல் ரகங்கள், தானிய வகைகள் கொண்டு மரபு வழியில் பக்குவமாய் சமைக்கும் உணவுகளும், பச்சை காய்கறிகள், நஞ்சில்ல கீரைகள், கொட்டையுள்ள பழங்கள், கொட்டை பருப்புகள் இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்தை மீட்கும் உணவு முறைகள்.

இவற்றில் என்றும் இளமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சிறந்த திட உணவு என்பது பழங்கள், பச்சை காய்கறிகள், கொட்டைப்பருப்புகளுடன் சேர்ந்த எளிதில் ஜீரணமாகும் தானிய உணவுகள்.

பழங்கள் திட உணவா?

பழங்கள் திட உணவா? என்று பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். பழங்களை உண்டால் போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்குமா? என்று பல கேள்விகள் எழும்.

உடல் ஆற்றலை வெளிப்படுத்தவே உணவு. நோயை சீராக்கவும் ஆரோக்கிய தேகத்தை கொடுக்கவும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவே சிறந்தது. இதுவே உடல், மன, மனோதிட ஆற்றலை அளிக்கக்கூடியது.

பலர் ஒரு நாள் முழுவதும் பழங்கள், பச்சை காய்கறிகளை உண்டு விட்டு இன்று ஒன்றும் சாப்பிடவில்லை, விரதம் என்று கூறுவதை கண்டிருக்கின்றோம். வேலா வேலைக்கு உணவு, என்ற கடமையில், அதுவும் திட உணவில் இயற்கை நமக்காக வழங்கிய பழங்கள் மற்றும் சமைக்காத காய்கறிகளை நம் உணவு பட்டியலில் இல்லாததே இன்றைய பெரும்பான்மையான உடல் நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும் காரணம்.

பழங்கள் திட உணவுகளே…

திடக் கழிவுகளாக வெளிவரும் அனைத்தும் திட உணவுகளே. சமையல் கலையை முற்றும் மறந்த நாம் நம்மை நோயிலிருந்து எளிதாக மீட்கவும், காக்கவும் கிடைத்த அமுதமே பழங்களும், பச்சை காய்கறிகளும், மரபு தானியங்களும். சிறந்த திட உணவு என்பது இயற்கையாக கிடைக்கக் கூடிய பருவகால நாட்டு ரக பழங்கள், காய்கள் மற்றும் தானியங்கள்.

நாகரிகம் என்ற பெயரில் மற்ற நாட்டவரைப் போல நடை, உடை, பேச்சு என பலவற்றை மாற்றிக்கொண்ட நாம் அவர்களைப்போல் நம் நாட்டு பயிர்களை வைத்து சலட் தயாரித்து ஒரு வேலை உணவாக அதை உண்ணலாமே.

காலை உணவு

அவசர யுகத்தில் எளிதாக காலை உணவை இவ்வாறு தயரிக்கலமே. ஒரு கப் எதாவது நாட்டு ரக பழங்கள், மற்றொரு கப் முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய கேழ்வரகு, காரட் துருவல், பொடியாக நறுக்கிய கோஸ், வெள்ளரி, பூசணி, காய்ந்த திராட்சை, பாதாம், பூண்டில் ஊறவைத்த செக்கு நல்ல எண்ணெய் சிறிது, எலுமிச்சை சாறு, இந்து உப்பு, மிளகு தூள், தேவைப்பட்டால் சிறிது தேங்காய் துருவல் இவை அனைத்தும் சேர்ந்த கலவை.

மதிய உணவு

மதிய உணவாக எதாவது ஒரு பாரம்பரிய நெல் அரிசியோ அல்லது சிறுதானியத்துடன் கூடிய சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எதாவது வகை உணவு உட்கொள்ளலாம்.

இரவு

முன் இரவிற்கு மிக எளிதாக ஜீரணிக்கக் கூடிய நாட்டு ரக வாழைப்பழம், மற்ற பழங்கள், பச்சை தேங்காய், சிறிது பாதாம் அதனுடன் மேலும் தேவைப்பட்டால் கம்பு அல்லது கேழ்வரகில் களி, இட்டிலி, இடியாப்பமும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

இடை பலகாரம்

குழந்தைகளுக்கு நடு நடுவே எதாவது பலகாரம் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் சுட சுட தானிய கொழுக்கட்டை, சுண்டல், கருப்பட்டி பணியாரம், உளுந்து அல்லது தானிய வடை செய்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். வேலைக்கு போகும் பெண்கள் வித விதமாக லட்டு, முறுக்கு என்று செய்து வைத்து கொடுக்க பிள்ளைகள் தங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள பாசத்தினால் திகைத்து போவார்கள்.

கடையில் வாங்கிக்கொடுக்கும் உணவினால் இந்த பினைப்பினையும் குடும்ப ஆரோக்கியத்தையும் என்றும் கொடுக்க இயலாது. அம்மா செய்து கொடுக்கும் உணவின் சுவை என்றென்றும் நாக்கிலும் மனதிலும் நிலைத்து இருக்கும்.

இவ்வாறான வகைகளில் விதவிதமான திட உணவுகளை உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.

(1 vote)