ஆமணக்கு கரைசல்

இயற்கை விவசாயத்தில் பலருக்கும் இருக்கும் சவாலான விஷயம் பூச்சி தக்குதல். இந்த பூச்சித் தாக்குதல்களால் செடிகள், மரங்கள், பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இவற்றை இயற்கை முறையில் அழிக்க இந்த நொதித்த ஆமணக்கு கரைசல் பேருதவியாக இருக்கும்.

அதிலும் தென்னை மரங்களை தாக்கும் பூச்சி, வண்டுகளை அழிக்கும் சிறந்த கரைசல் இது. எலி தொந்தரவுகளுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

நொதித்த ஆமணக்கு கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • ஆமணக்கு விதைகள் – 5 கிலோ
  • தண்ணீர் – 5 லிட்டர்
  • மண்பானை அல்லதி சிமெண்ட் தொட்டி

நொதித்த ஆமணக்கு கரைசல் தயாரிக்கும் முறை

  • 5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
  • அதன் பின் கலவையிலிருந்து ஒருவிதமான வாசனை தோன்றும்.
  • இந்த கலவையை எடுத்து பயன்படுத்தலாம்.

நொதித்த ஆமணக்கு கரைசல் பயன்படுத்தும் முறை

  • 5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து முதலில் கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும்.
  • மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.
  • தென்னந்தோப்பு, பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து இறந்து விடும்.
  • இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூச்சிகளை துாக்கி எறிந்துவிட்டு மீண்டும் அதே கரைசலை பயன்படுத்தலாம்.
  • இந்த ஆமணக்கு கரைசலை 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

கட்டுப்படும் பூச்சிகள்

  • கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளும், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களின் சாம்பல் நிற வண்டையும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
  • சிறுதானிய பயிர்களில் இக்கரைசலை பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும்.
  • எலிகளின் நடமாட்டத்தை குறைக்கலாம்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு