இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை
பீஜாமிர்தம் என்றால் என்ன?
விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.
செடிகளுக்கு ஏற்படும் வேர்அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்களை கட்டுபடுத்தும் மிக சிறந்த இயற்கை உரம்.
அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
இது இயற்கை முறையிலான பூச்சி கொல்லி, கிருமி நாசினி ஆகும்.
பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள்
- தண்ணீர் 20 லிட்டர்
- பசு மாட்டு சாணம் 5 கிலோ
- பசு கோ மூத்திரம் 5 லிட்டர்
- சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
- உயிருள்ள மண் ஒரு கைப்பிடி அளவு
தயாரிக்கும் முறை :
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டு சாணி 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம், மண் ஒரு கைப்பிடி அளவு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்.
பயன்படுத்தும் முறை :
விதை நேர்த்தி செய்ய காய்கறி அல்லது பயிர் விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பீஜாமிர்தம் நன்மை என்ன?
வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு