விவசாய பழமொழிகள்

  • ஆடிப்பட்டம் தேடி விதை!
  • காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்!
  • சொத்தைப் போல்,விதையைப் பேண வேண்டும்!
  • தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!
  • உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக் கேனும் மிஞ்சாது
  • கூளம் பரப்பி கோமியம் சேர்!
  • ஆற்று வண்டல் தேற்றும் பயிரை!
  • நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்!
  • உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ!
  • கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை!
  • ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே! மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக் கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்!
  • நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்!
  • களர் கெட பிரண்டையைப் புதை!
  • பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு!
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
  • மாசிப் பனி மச்சையும் துளைக்கும்!
  • ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல்
  • ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி.
  • உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.
  • மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!
  • கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி!
  • கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு!
  • எள்ளுக்கு ஏழு உழவு
  • புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு.
  • அகல உழவதை விட, ஆழ உழுவது மேல்!
  • பனி பெய்தால் மழை இல்லை. பழம் இருந்தால் பூ இல்லை.
  • அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!
  • தவளை கத்தினால்தானே மழை!
  • நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு!
  • காணி தேடினும் கரிசல் மண் தேடு!
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை
  • மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!
  • தை மழை நெய் மழை!
  • புத்து கண்டு கிணறு வெட்டு!
  • வெள்ளமே ஆனாலும்,பள்ளத்தே பயிர் செய்!
  • முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்
  • இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது.
  • எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!
  • ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
  • ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை.
(111 votes)