மருந்தாகும் மரங்கள்

உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்க மரங்கள் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் மரங்களுடன் நாம் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்க அதுவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மருந்தாகவும் இருக்கிறது. மரங்கள் பிராண சக்தியை அதிகளவில் அளிக்கின்றன.

  • மரங்களுடன் அதிகமாக தொடர்பு கொள்வதால் மாத்திரைகளுக்கு விடை கொடுக்க முடியும்.
  • அழகான பூக்களும் செடிகளும் நம் ஆரோக்கியத்தை காக்கும் உயர்த்த பொருட்கள். மல்லிகைப்பூ, சங்குப்பூ, வேப்பம்பூ, செம்பருத்திப் பூ, ரோஜாப் பூ என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
  • பசுமையான நிறங்கள் மனதிற்கு இதத்தை கொடுக்கும். சிகப்பு, மஞ்சள் நிறப்பூக்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வெள்ளை மற்றும் ஊதா பூக்கள் மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
  • மனிதர்களை நேரடியாக காப்பவை பூக்கள். உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் மனதிற்கும் தெம்பையும் உண்டாக்கி பல வியாதிகளை பூக்கள் குணமாக்க்குகின்றனர்.
  • வீட்டுத் தோட்டம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. உளவியல் கோளாறுகளை குணமாக்கும். வாழ்வியல் பிடிப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது.
  • தூக்கமின்மைக்கு திருநீற்றுப்பச்சிலை உதவுகிறது.
  • மனம், உடல் சார்ந்த நோய்களுக்கு மரங்கள் மருந்தாகிறது.
  • நுரையீரல் சார்ந்த வியாதிகளுக்கு அரச மரம், பைன் மரங்கள் உதவுகிறது.
  • குழந்தையின்மைக்கு அரச மர காற்றே மருந்தாகிறது.
  • தோல் நோய்களுக்கு வேப்ப மரங்கள் மருந்தாகிறது.
  • தலைவலி போக ஏதோ ஒரு மரத்தின் மீது தலை வைத்துப் படுத்தாலே போதும் தலைவலி போய்விடும்.
  • நோயாளிகள் எப்பொழுதுமே மரங்களிடையே வாழ்வது அவசியம். இதனால் உடலில் பல முக்கிய இரசாயனங்கள், திரவங்கள் உற்பத்தியாகிறது. இதனால் வியாதிகள் விரைவில் குணமாகும்.
  • காசநோய்க்கு வேப்ப மரங்கள்சிறந்த மருந்தாகிறது. வேப்ப மரத்தின் காற்று காசநோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • புளிய மரத்தின் காற்று உடலுக்கு பல வியாதிகளைக் கொண்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.
  • பச்சை மரங்கள், அழகிய பூக்கள், இலைகளைக் கொண்ட மரங்கள், செடிகள், கொடிகளை நட்டு நம் உடல் நலத்தை பேணி பாதுகாப்போம். அடுத்த சமூகத்திற்கு இதைவிட பெரிய பரிசினை நம்மால் அளிக்க முடியாது.
(32 votes)