மூளை பலம் பெற

மனித உடலின் புரியாத ஒரு விந்தை மூளை. பல கோடிக்கணக்கான நரம்புகள், செயல்பாடுகள், செயல்கள், நினைவாற்றல் என பல பல இயற்கை பிரம்மாண்டம் தான் மூளை என்றால் அது மிகையாகது.

இரண்டு வயது குழந்தை 1330 திருக்குறளையும் கடகடவென்று கூறவும், நூறுவயத்தில் இருப்பவர் சாதாரணமாக தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று விடாமல் கூறவும் அசாதாராண சக்தியும் நினைவாற்றலும் அவசியம். இதனை புத்துணர்வுடனும் சுறுசுறுப்புடனும் அளிக்க நமக்கு உதவுவது மூளை.

ஒவ்வொருவருக்கும் மூளை சிறப்பாக செயல்படுமானால் நமது சிந்தனை திறனும் அதனை செயல்படுத்தும் திறனும் முன்னோக்கியும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவும் இருக்கும். அதனால் நமது மூளை சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாக செயப்பட சில வீட்டுக்குறிப்புகளை தெரிந்துக் கொள்ளலாம். இவை வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கும் ஆற்றலை அளிக்கும்.

வல்லாரை கீரை

குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி சீராக இருக்கவும் பலம் பெறவும் வல்லாரை சிறந்தது. பச்சையாக வல்லாரை இலை கிடைக்கும் காலத்தில் அதனை துவையல், கருப்பட்டி சேர்த்து மிட்டாய், தேங்காய்ப் பால் சேர்த்து கீர் தயாரித்து கொடுக்கலாம். இவை நல்ல பயன் அளிக்கக் கூடியது.

கிடைக்கும் காலங்களில் வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து பொடித்து வல்லாரை பொடியாக தயாரித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

வல்லாரை பொடி

காலை, மாலை என இரண்டு வேளை நெய்யுடன் வல்லாரை பொடியை கலந்து உண்டு வர மூளை பலம் பெறும், நல்ல ஒரு நினைவாற்றலையும் பெறமுடியும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் இந்த வல்லாரை பெருமளவில் உதவக் கூடியதாக உள்ளது. வல்லாரை சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தி சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்பாகும், புத்துணர்வுடனும் இயங்கும்.

சங்கு புஷ்பம்

நமது நினைவாற்றலை அதிகரிக்கும் அற்புதமான புஷ்பம் சங்கு பூக்கள் இது சிறந்த ஒரு மூலிகையுமாகும். சங்குபூக்களை (வெள்ளை / ஊதா) தேநீராக தயாரித்து பருக மூளையின் ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும், நல்ல நினைவாற்றலையும் பெற முடியும்.

வேம்பு

மூளையை ஏதாவது புண் ஏற்பட்டிருந்தால், மூளையின் ஏற்பட்டிருக்கும் புண் தலையில் வரக்கூடிய புண் ஆறுவதற்கு வேப்பம்பூ மற்றும் வேப்ப இலைகள் உதவும். வேப்பம்பூ மற்றும் வேப்ப இலைகளை அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து குளிக்க நல்ல ஒரு பலனை பெறமுடியும். இவ்வாறு செய்வதால் தலையில் ஏற்பட்டிருக்கும் பொடுகு, புழுவெட்டு நீங்குவதுடன் மூளையில் வரக்கூடிய புண்ணும் ஆறும்.

நாயுருவி

மூளையில் ஏற்படும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளை நீக்குவதற்கு நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி வேர் நல்ல ஒரு பலனை அளிக்கும். நாயுருவி வேரையும் கரிசலாங்கண்ணி வேரையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து பாதியாக வத்த விட்டு கஷாயமாக தயாரித்து பருகி வர நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

இலந்தம் பழம்

மூளை சிறப்பாகவும் புத்துணர்வுடன் செயல்பட இலந்தம் பழம் உதவும். இலந்தம் பழத்தை கருப்பட்டி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து சாறாக தயாரித்து பருகி வர மூளை படபடப்பின்றி நிதானமாக சிறப்பாக செயல்படும். நல்ல ஒரு தூக்கத்தையும் அளிக்கும் அற்புத பானம் இது.

தூதுவளை காய்

தூதுவளை காயும் மூளைக்கு நல்ல ஒரு பலத்தை அளிக்கும். தூதுவளை காய்களை மோரில் ஊறவைத்து காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்றவாறு அன்றாடம் சிறிதளவு எண்ணெயில் வறுத்து உண்பதால் மூளை நரம்புகள் பலப்படும்.

பீர்க்கங்காய் வேர்

பீர்க்கங்காய் வேர் மூளையை பலப்படுத்தும் தன்மை கொண்டது. பீர்க்கங்காய் வேரை ஒரு கப் நீரில் கொதிக்கவைத்து அது பாதியளவாக காய்ச்சி கிடைக்கும் கசாயம் மூளைக்கு சிறந்தது. இதனை ஆண்கள், பெண்கள் என அனைவரும் உண்ணலாம்.

கல்தாமரை இலை

மூளை பலவீனமாக இருந்தால் அது சீராக கல்தாமரை இலை சூரணம் உதவும். இந்த சூரணத்தை உண்டுவர நல்ல ஒரு பலனை பெற முடியும்.

(19 votes)