- கொசுவுக்குப் பயந்து கோட்டையை விட்டு ஓடியது போல.
- சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானேன்.
- தட்டிக் கொடுத்தால் தம்பி தலை விரித்து ஆடுவான்.
- துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பரிசமா?
- துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
- நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது.
- பத்து பேருக்கு பலியிட்டு ஒருவனுக்கு தலைச்சுமை.
- பொந்தில் சுகப்பட்ட மந்தியைப் போல.
- வாழ்வாருக்கு சீதேவி வாயிலே.
- பள்ளம் உள்ள இடத்தில் தண்ணீர் தங்கும்.
- நாராயணன் கோயிலுக்கு நாலு வாசல்.
- நடுத்தெருவில் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
- தாலியறுத்த வீட்டிலே ஆளுக்கு ஆள் அதிகாரம்.
- சாப்பிள்ளை பெற்றவளுக்கு சந்தோஷம் வருமா?
- கோவில் பூனை தேவர்க்கு அஞ்சாது.
- கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்.
- குத்திக் கெட்டது பல். குடைந்து கெட்டது காது.
- கீரைத் தண்டு பிடுங்க ஏலோலப் பாட்டா?
- கபடச் சொல்லைவிட கடிய சொல்லே மேல்.
- வாக்கும் மனசும் ஏத்து வார்த்தை சொல்ல வேண்டும்.
- கட்டி அழுகிற போது கையும் துழாவுமாம்.
- எழுத்தறியாதவன் ஏட்டை சுமந்தது போல.
- உளறிக் கொட்டி கிளறி மூடாதே.
- உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.
- ஆற்று மண்ணுக்கு மாற்று மண் உரம்.
- ஆவது அஞ்சிலே தெரியும், காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
- அவசரச் சுருக்கே அரிவாள் மனைக்கடுக்கே.
- அரைப்படி அரிசியிலே அன்னதானம், அதிலே கொஞ்சம் மேளதாளம்.
- அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்.
Related