சூரக்குறுவை – நமது பாரம்பரிய அரிசி

மருத்துவகுணங்கள் கொண்ட சிறந்த பாரம்பரிய அரிசி இந்த சூரக்குறுவை. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் அரிசி இந்த சூரக்குறுவை.

சூரக்குறுவை அரிசியினுடைய நெல் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. இது ஒரு மோட்டார் ரக அரிசி ரகமாகும். இதனுடைய அரிசி கரும் பழுப்பு நிறத்திலும் இதனுடைய நெல் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

பூச்சி நோய் தாக்குதல் என எந்த விதமான இயற்கை சிற்றதினாலும், நோய் பரவலாலும் பாதிக்கப்படாத ஒரு சிறந்த நெல் ரகம் இது. உடல், மனதிற்கு தேவையான எல்லாவிதமான வலிமை, தைரியம், மனோதிடத்தையும் அளிக்கக்கூடிய ஒரு அரிசி இரகமாகவும் இந்த சூரக்குறுவை உள்ளது.

இந்த பாரம்பரிய அரிசி விதைத்து நூற்று இருபது நாள் முதல் நூற்று முப்பது நாளில் அறுவடைக்கு தயாராகும். அரிசி இந்த சூரக்குறுவை அரிசி. இயற்கை முறையில் எந்த இரசாயனம், பூச்சி கொல்லிகள் இன்றி விளையக்கூடிய அரிசி. நோய் தாக்குதல் மற்றும் எந்த பராமரிப்பும் இன்றி சிறப்பாக விளையக்கூடியதாகவும் இருக்கும்.

களை பாதிப்பு இல்லாமலும் விளையக்கூடிய ஒரு நெல் ரகம் இது. இயற்கையாகவே இந்த நெல் விளையக்கூடிய வயலில் நோய், பூச்சி தொந்தரவு ஏற்படாது.

புரதம், வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் அதிலும் குறிப்பாக இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்துக்கள் என பல விதமான சத்துக்கள் இந்த சூரக்குருவை அரிசியில் உள்ளது. இந்த அரிசியில் தயாரிக்கக் கூடிய கஞ்சி உடலுக்கு வலுவூட்டும்.

பத்திய கஞ்சிக்கு நல்லது. நோய்வாய்ப்பட்டவர்கள், விரதமிருப்பவர்களுக்கு தேவையான சத்துக்களை இந்த அரிசியும் அரிசி கஞ்சியுமே போதுமான அளவு அளிக்கும். குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசி கஞ்சி நல்ல ஊட்டத்தை அளிக்கும். கன்று போட்ட பசுவிற்கும் சிறந்த அரிசி.

அழகை அதிகரிக்கும்

உடல் அழகை மீட்டெடுக்க உதவும் அற்புதமான பாரம்பரிய அரிசி இந்த சூரக்குறுவை அரிசி. உடலில் இருக்கும் ஊளை சதையை குறைத்து சிறந்த உடல் அழகையும் பலத்தையும் அளிக்கும். என்றும் இளைமையை பாதுகாக்கும்.

உடல்பருமனுக்கு

உடல்பருமனுக்கு சிறந்த அரிசி. உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும், தேவையில்லாத சதையையும் வெளியேற்ற உதவும் சிறந்த அரிசி.

பிரசவித்த பெண்களுக்கு

குழந்தை பெற்ற தாய்மார்களின் உடல் நலத்திற்கும், உடல் அழகிற்கும் உறுதுணையாக இருக்கும் அரிசி. குழந்தை பெற்ற தாய்மார்களின் வயிற்றுப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவும் சிறந்த அரிசி.

தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் சுண்ணாம்பு சத்து குறைபாட்டை தடுக்கும் ஆற்றலும் இந்த அரிசிக்கு உள்ளது. எலும்பை வலுபடுத்தி, குழந்தையின் ஆரோக்கியத்தையும், குழந்தையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும்.

இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பணியாரம், சோறு என அனைத்து விதமான உணவுகளுக்கும் இந்த அரிசி பொருத்தமானது. சந்தைகளில் இதனை அரிசி, அவல், சூரக்குருவை சிகப்பரிசி மாவாகவும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான சிறந்த அரிசி.

(4 votes)