எள் பயன்களும் மருத்துவமும்

தமிழகத்தில் பரவலாக விளையும் ஒரு பயறு எள். எள்ளில் பல வகைகள் உள்ளது. பல மருத்துவ குணங்களையும், நன்மைகளையும் கொண்ட சிறந்த எண்ணெய் வித்து எள். இந்த எள்ளிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு நல்லெண்ணெய் என பெயர். பொதுவாக எந்த எண்ணெய் வித்திலிருந்து எண்ணெய் எடுத்தாலும் அதனுடைய பெயருடன் எண்ணெய் சேர்த்து அழைப்பதுண்டு.

தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்தால் தேங்காய் எண்ணெய், நிலக் கடலையிலிருந்து எண்ணெய் எடுத்தால் கடலை எண்ணெய் எண்ணெய் எனப்படும். அவ்வாறு எள்ளிலிருந்து பெறப்படும் எண்ணெய் எள்ளு எண்ணெய், ஆனால் நம் முன்னோர்கள் இந்த எள்ளின் தன்மை, மருத்துவகுணம், சத்துக்களை கணக்கிட்டு இதற்கு “நல்ல எண்ணெய்” நல்லெண்ணெய் என அழைக்கத் தொடங்கினர்.

அன்றாடம் எள்ளை உட்கொள்வது சிறந்த நன்மைகளையும், பலனையும் அளிக்கும். எள்ளு சாதம், எள்ளு பொடி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், எண்ணெய் கொப்பளிப்பது, எண்ணெய் குளியல் என பல விதங்களில் அன்றாடம் நல்லெண்ணையை பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல சத்துக்கள் கொண்டது. எள்ளிலிருக்கும் சில மருத்துவ தன்மைகளையும் பயன்களையும் இனி பார்க்கலாம்.

உடல் இளைக்க அல்லது பருக்க

காலை எழுந்தவுடன் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க வேண்டும். 3 மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது. இவ்வாறு செய்ய குச்சி உடம்பார்களுக்குச் சதை போடும். தடியாக இருப்பவர்கள் இளைப்பார்கள்.

படுக்கையில் சிறுநீர்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் அப்பழக்கம் ஒழியும்.

மூல நோய்க்கு

மூல நோய் உடையவர்கள் 5 கிராம் எள் விழுதுடன், 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இரத்தக்காயம்

இரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவ நல்ல குணம் தெரியும்.

பல் பலவீனம் நீங்க

தினசரி காலை ஒரு கைப்பிடி
எள் சாப்பிட பற்களின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு, பற்கள் பலமாகும்.

தொழு நோய்க்கு

தொழுநோய் உள்ளவகளுக்கு எள் சிறந்த பலனை அளிக்கும். எள், உப்பு, மிளகாய் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் எடுத்து லேசாக வறுத்து, இடித்து, சலித்துப் பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு அரை தேக்கரண்டி அளவு பசுநெய்யில் கலந்து 21 நாள் உண்டால் நல்ல பலனை பெறலாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உடையவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். பின் இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்க வேண்டும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி (எள்ளுருண்டை) காலை ஓருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருக வேண்டும். இவ்வாறு 21 நாள் செய்துவர நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க வேண்டும். தினம் பாகற்காய் சேர்க்க வேண்டும்.

(1 vote)