பப்பாளிக் காய் – பயன்கள்

அனைவருக்குமே தெரிந்த ஒரு பழம் தான் பப்பாளிப் பழம். வைட்டமின் ஏ சத்துக்கள் உட்பட பலவிதமான சத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு பழம். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்தாக இந்த பழம் உள்ளது. இந்த பப்பாளியின் காய் பப்பாளிக் காய். இந்த பப்பாளிக் காயும் உண்ண தகுந்தது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. மழை காலத்தில் / குளிர் காலத்தில் இந்த பப்பாளிக் காயை சமைத்து உண்பதால் உடலிக்கு தேவையான வெப்பத்தை பெறலாம்.

பப்பாளிப் பழத்தைப் போலவே அதைவிட அதிகளவில் சத்துக்களைக் கொண்டது இந்த பப்பாளிக் காய். புரதம், நல்ல கொழுப்பு, நார்சத்துக்கள் என பல சத்துக்களைக் கொண்ட காய் இது. இதனை சாறு எடுத்தும், சமைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கூடியது. அஜீரணம், இருதய நோய், சரும பளபளப்பு, இரத்த சோகை. சளி, இருமல், தொற்று நோய், காய்ச்சல், மலச்சிக்கல், உடல் பருமன், வீக்கங்கள் போன்றவற்றிற்கு சிறந்தது.

பப்பாளிக் காய் உணவு

பப்பாளிக்காயை சிறு சிறு துண்டாக நறுக்கி மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும் மசாலா சேர்க்காமலும் இதனை வெள்ளை பொரியலாகச் செய்து உணவுடன் நாம் இதனைஉண்ணலாம் (பப்பாளி பொரியல்), பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.

பால் சுரப்பை அதிகரிக்கும்

பாலுட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும். மாதவிலக்கு நேரத்தில் வரும் அடி வயிற்று வலிகளை போக்கும்.

குடும்ப கட்டுப்பாடுகளுக்கு உதவும்

இயற்கையிலேயே பச்சை நிற காய் பப்பாளியில் estrogen என்ற ஹார்மோன் உள்ளது. அதனாலேயே பப்பாளிக்காய் குடும்ப கட்டுப்பாடுகளுக்கு உதவும் காயாகும்.

மாதவிலக்கு ஏற்பட

சில பெண்கள் மாதவிலக்கு ஏற்பட பப்பாளி பழத்தை சாப்பிடுவதுண்டு. இது தவறு. இதனால் மாதவிலக்கு ஏற்படாது. பப்பாளிக் காயை சாப்பிட்டால் தான் உடனடியாக பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும். பப்பாளிக்காய் என்றால் ஒரேடியாக காயாகவும் இருக்கக்கூடாது, பழமாகவும் இருக்கக்கூடாது. இரண்டிற்கும் நடுவான பாகமான செங்காயாக இருக்க வேண்டும். இதற்கு தான் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் ஆற்றல் உண்டு.

கருத்தடைக்கு கீழ்காணும் முறையில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்

  • பப்பாளி காயின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக அதாவது இட்லி தட்டில் மாவு ஊற்றும் அளவில் செய்துக் கொள்ள வேண்டும்.
  • இட்லி தட்டில் மாவு ஊற்றுவதற்கு பதில் நறுக்கி வைத்துள்ள பப்பாளிக்காயை அதில் வைத்து இட்லி பானையில் வைத்து மூடி அடுப்பில் வைத்து வேக விடவேண்டும்.

  • பப்பாளிக்காய் வெந்து ஆவி வந்ததும் அதனை எடுத்து ஆறிய பின் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள சமயம் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு தினமும் சாப்பிட்டால் கரு உற்பத்தியாகாது.
  • இதனை மாதவிலக்கு சமயத்தில் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் கருத்தரிப்பது அறவே இருக்காது.

சீதள உடல் அமைப்பு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல வீரிய சக்தியைக் கொடுக்கும்.

பொதுவாக பப்பாளிக்காய் அதிக உஷ்ணத்தை கொடுக்கக் கூடிய காய் ஆகும்.

திருமணமானவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் இதனை தவிர்ப்பது அவசியமானது.

(13 votes)