பெருஞ் செருப்படை – நம் மூலிகை அறிவோம்

பெருஞ் செருப்படை; Perum seruppadai

கிராமப்புறங்களில் செடி கொடிகளுக்கு இடையே முளைத்து இருக்கக்கூடிய ஒரு சிறு செடி வகை இந்த பெருஞ் செருப்படை மூலிகை. இது நட்டுவாக்கிளி விஷம் ஒன்றைத்தான் முறிக்கும் தன்மைக் கொண்டது.

நட்டுவாக்கிளி கொட்டி விட்டது என்று தெரிந்தால் முதலில் கீழ்கண்ட மருந்து தயாரித்துக் கொடுக்க உடனே விஷம் முறிந்து பலன் கிடைத்துவிடும்.

பெருஞ் செருப்படையை கொண்டு வந்து அதில் ஒரு பாக்கு அளவு எடுத்து ஏழு மிளகும், ஒரு வெள்ளைப் பூண்டின் பாதி அளவு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து வாயில் போட்டு விழுங்கச் செய்து சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். ஒரே முறை கொடுத்தால் போதும், விஷம் முறிந்து விடும்.