சிறுதானிய சட்னி

புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • ¾ ஸ்பூன் வெந்தயம்
  • சிறிதளவு பெருங்காயம்
  • 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • சிறிதளவு கடுகு, உளுந்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

பின் சிறுதீயில் கம்பு, கேழ்வரகு, மிளகு, வெந்தையம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

அடுத்ததாக மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

சுவையான சிறுதானிய சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சிறுதானிய சட்னி

புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 4 ஸ்பூன் நாட்டுக் கம்பு
  • 4 ஸ்பூன் கேழ்வரகு
  • 5 தக்காளி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • ¾ ஸ்பூன் வெந்தயம்
  • சிறிதளவு பெருங்காயம்
  • 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • சிறிதளவு கடுகு, உளுந்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை

  • வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • பின் சிறுதீயில் கம்பு, கேழ்வரகு, மிளகு, வெந்தையம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
  • அடுத்ததாக மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.
  • சுவையான சிறுதானிய சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.