கருங்குறுவை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

எல்லாவற்றிலும் உலகத் தரம்…

உலகத் தரம் வாய்ந்த படிப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்லூரி, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகம், உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை, உலகத் தரம் வாய்ந்த மருந்துகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம், உலகத் தரம் வாய்ந்த ஆடை அலங்காரம், உலகத் தரம் வாய்ந்த ஆபரணங்கள், உலகத் தரம் வாய்ந்த வீட்டு வசதி, உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள்…

அதேப்போல் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு பொருட்கள், உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பம், உலகத் தரம் வாய்ந்த சினிமாக்கள், உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பு, உலகத் தரம் வாய்ந்த சாலைகள், உலகத் தரம் வாய்ந்த வாகனங்கள், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் வளர்ச்சி…

உற்பத்தித் திறன், உலகத் தரம் வாய்ந்த உணவு உற்பத்தி, உலகத் தரம் வாய்ந்த விவசாய முறைகள், உலகத் தரம் வாய்ந்த உணவுகள்,  உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள், உலகத் தரம் வாய்ந்த புத்தகங்கள்…. இப்படி எல்லாவற்றிலும் உலகத் தரம் என்பது அன்றாடம் வாழ்வியலில் நூறுசதம் ஒவ்வொருவரிடமும் உட்புகுந்துள்ளது.

காலை எழுந்து கையில் எடுக்கும் பற்பசை முதல் இரவு கொசுவத்தி வரை அனைத்திலும் உலகத் தரம் இன்று தனது மூக்கை எளிதாக நீட்டியுள்ளது. 

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு என்பதே உலகத் தரம் தான் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதர்கள் தான் இன்று அதிகமாக உள்ளனர். தொட்டதெல்லாம் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அதுவும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருக்கின்றனர். 

தங்களின் இந்த விழிப்புணர்வு வாய்ந்த கவனம் உண்மையில் சிறப்பானது தான் என்றாலும் ஒன்றை யாரும் மறந்துவிட முடியாது. உலகத் தரம் என்பது இன்று அனைத்திலும் இருந்தாலும் மனிதனின் தரம் இன்று குறைந்து விட்டது. மனிதனின் தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது மனிதனின் வாழ்வியல் தரமும், மனிதனின் ஆரோக்கியத்தின் தரமும் தான்.

தங்களின் இந்த விழிப்புணர்வு வாய்ந்த கவனம் உண்மையில் சிறப்பானது தான் என்றாலும் ஒன்றை யாரும் மறந்துவிட முடியாது. உலகத் தரம் என்பது இன்று அனைத்திலும் இருந்தாலும் மனிதனின் தரம் இன்று குறைந்து விட்டது. மனிதனின் தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது மனிதனின் வாழ்வியல் தரமும், மனிதனின் ஆரோக்கியத்தின் தரமும் தான்.

வீடு, வாகனம், குளிர்சாதனம், அடுமனைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், காலணிகள், சோபா போன்ற வீட்டு பொருட்களும், தரமான சிகிச்சை, உணவு என்று ஆரோக்கியம் சம்மந்தமான விஷயங்களும் உலகத் தரத்துடன் இன்று இருக்க மனிதனின் எண்ணங்களும், ஆரோக்கியமும் எந்த பிரத்தியேக தரத்துடன் இன்று இல்லை என்பது நிதர்சனம்.

வீடுகள் அழகாக அலங்கரிக்கப் பட்ட நிலையில் மனங்களும், எண்ணங்களும் ஏன் நிம்மதி கூட சொல்லும் அளவு இல்லை. உலகத்து விசேஷ உணவுகள் நொடி பொழுதில் கைகளுக்கு கிடைத்தாலும் அதை உண்ணும் யாரும் ஆரோக்கியத்துடன் இல்லை.

தொண்ணுற்றி ஐந்து சதவீதம் நாற்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் இருந்தாலும் ஓரிரு நாட்கள் கூட மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ சிரமப்படுவது தான் மிகுந்த அவலமான சூழ்நிலை.   

இப்படி தரம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் தரமான வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருக்க வேண்டிய தனது வாரிசுகளை உருவாக்க முடியாத அவலமும் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடத்திலும் இன்று அரங்கேறுகிறது.

மலட்டுதன்மை

ஆண்மையின்மை மற்றும் கருவுறாமை என்பது இன்று சகஜமான ஒன்றாகிப் போய்விட்டது. அதற்கு துணையாக இருக்க வேண்டிய உறுப்புகள் சீராக செயல்படாதது மிக முக்கிய காரணமாக உள்ளது.

குழந்தை பிறப்பதற்கே தரமற்ற சமுதாயமாக இருக்க அதையும் மீறி பிறக்கும் குழந்தைகளின் தரம் கோமாளித்தனமானதாகவே உள்ளது. வீரியமற்ற, நோய் எதிர்ப்புசக்தியற்ற குழந்தைகளாகவே பிறக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மேலோங்கி உள்ளது. இவை மட்டும் இல்லையென்றால் சிலநாட்கள் உயிரோடு வாழ்க்கையை நடத்துவதே சிரமம்தான் என்ற நிலையும் இன்று அரங்கேறுகிறது.

அதாவது கால் உடைந்து விட்டது என்றால் காலை சரிசெய்யாமல் கோலூன்றி மீதமுள்ள வாழ்க்கையை நடத்துவது இன்றைய படித்த அறிவாளிகளின் செயல்களாக உள்ளது.  

தரத்திற்கும் குழந்தையின்மைக்கு என்ன சம்மந்தம் என்கிறீர்களா?.. தரம் என்ற பெயரில் தரமற்றதை அன்றாடம் பயன்படுத்துவதும், உட்கொள்வதும் தான் அனைத்திற்கும் காரணம்.

உணவு

உலகத் தரம் என்ற பெயரில் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் விளையும் காய்கறிகள், கிடைக்கும் மாமிசங்கள், உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தயாராகும் உணவுகள் போன்றவை மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றன.

இவை கெடாமலும், உருகுலையாமலும் பயணிக்க பல வகையான இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான உணவுகளை தொடர்ந்து உண்ண உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன. உடலில் இயற்கையாக ஏற்படும் இரசாயன மாற்றங்கள் மாற்றமடைகிறது.

நொதிகள், சுரப்பிகள், திரவங்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆண்கள், பெண்களின் எண்ணங்களும், மன நிலையும் மோசமடைய ஆண்மை, பெண்மையை பறைசாற்றும் உறுப்புகள் பலகீனமடைகிறது. அந்த உறுப்புகளில் சுரக்கும் சுரப்பிகள் இந்த இராசயங்களால் அளவு குறைந்தும், உயிராற்றலற்று சுரக்கிறது. 

ஆண்களுக்கு விறைப்புத்தன்மையற்று, விந்தணு எண்ணிக்கை குறைபாட்டு பிரச்சனைகள் உருவாகிறது. பெண்களுக்கோ மாதவிடாய் வராமல் இருப்பது, மாதவிடாய் தொந்தரவு, கட்டிகள், நார்த்திசுக் கட்டிகள் போன்ற பிரச்சனை உருவாகிறது. இதனால் குழந்தைப்பேறு இல்லாத நிலை உருவாகிறது.

எதை உண்கிறோமோ…

இந்த தரமற்ற வாழ்க்கை முறைக்கு இந்த இரசாயன உணவுகள் மட்டும் காரணமில்லை. ‘எதை உண்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்’ என்பது பொதுவான கருத்து. இயற்கையின் படைப்பில் அனைத்துமே தனது இனத்தை இயற்கையாக படைக்கக் கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. 

வெண்டை, கத்திரி, தக்காளி, புடலை போன்ற செடி வகைகள் தனது இனத்தை விதைகள் மூலம் பரப்பி பெருக்கிக் கொள்கிறது. நமது முன்னோர்களின் காலத்தில் ஒரு வெண்டை விதையை மண்ணிற்குள் விதைக்க அது பல காய்களைக் கொடுக்கும், அந்த செடியில் உள்ள வீரியமிக்க ஒரு காயை செடியிலேயே விட்டுவிட அது நன்கு முத்தி தரமான விதையைக் கொடுக்கும்.

மீண்டும் அந்த விதையைப் பயன்படுத்தி விதைக்க பயன்படுத்திக் கொள்ளலாம், இவ்வாறு வெண்டை போன்ற செடி வகைகள் இயற்கையான முறையில் அவற்றின் இனத்தை பெருக்கிக் கொண்டன. செடிகள் மட்டுமல்ல மரங்களும் இவ்வாரே அதன் இனத்தை பெருக்கிக் கொண்டன. 

மரம் செடி கொடிகள் மட்டுமல்ல கோழி, மீன், ஆடு போன்றவையும் அதன் இனத்தை எந்த செயற்கையின் துணையுமின்றி தானே இனப்பெருக்கம் செய்துகொண்டு தனது வாழ்க்கை சுழற்சியை செய்துகொண்டன.

இவ்வாறான உணவுகளை மனிதன் உண்ண எந்த பிரத்தியேக தரமும் தேவையில்லாது தனது இனப்பெருக்கத்தையும் சீராக பரம்பரியத்தைக் காத்து அமைத்துக்கொண்டிருந்தான். 

அதற்கு வந்ததுதான் சோதனை என்ற வகையில் இன்று நமது உணவுகள் அனைத்தும் தரம் என்ற பெயரில் தரமற்றதாக மாறியுள்ளது. தரமான காய்கறிகள், ஆனால் தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலை, அதாவது விதையற்ற காய்கறிகள், பழங்கள். பார்க்க சில விதை இருந்தாலும் முளைப்புத்திறன் அற்ற விதைகளாக இருக்கும்.

அதேபோல் இயற்கையாக கன்று ஈன்ற முடியாத, பல இரசாயனங்கள் செலுத்தி எடுக்கக் கூடிய மாட்டின் பால், முட்டை இடாத கோழி, இராசனம் கொண்டு கறிக்காக வளர்க்கப்படும் ஆடுகள், உணவுக்காக மட்டும் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி வளர்க்கப்படும் மீன்கள் என்று நாம் உண்ணும் அனைத்தும் செயற்கையாக மாறியுள்ளது. இவற்றை நாம் உண்டால் நம்மால் எப்படி இயற்கையாக குழந்தைப்பேறினைப் பெறமுடியும். 

அந்நிய நாடு இயக்கத்தால் நமது பாரம்பரிய ரகங்களில் ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகள் மட்டும் காணாமல் போகவில்லை, ஒட்டுமொத்த ஆரோக்கியமும், தரமான வாழ்வியலும், சத்தான உணவும் கூடவே காணாமல் போய்விட்டது.

நாட்டு நாய்கள், நாட்டு மீன்கள், நாட்டு ஆடுகள், நாட்டு கோழிகள் தொடங்கி பாரம்பரிய தானியங்கள், நாட்டு காய்கறிகள், நாட்டு பழங்கள், பாரம்பரிய நாட்டு ரக அரிசி ரகங்கள் என அனைத்தும் காணாமல் போக செயற்கையும், இராசயனங்களும் கலந்த உணவுகள் ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாகவே நமது பாரம்பரிய குணங்கள் பறிபோக குழந்தைப்பிறப்பு கூட சாத்தியமாகாத சூழல் உருவாகியுள்ளது. 

இன்று எவ்வாறு மலட்டு, முளைப்புத்திறன் அற்ற விதைகள் உள்ளதோ, செயற்கையாக மட்டுமே ஆடுமாடுகள் கன்றுகளை ஈன்றுகிறதோ அவ்வாறே மனிதர்களும் மாறிவிட்டனர். மனிதர்களும் வீரியமற்றவர்களாக மாறியுள்ளனர்.

மனிதர்கள் உண்ணும் உணவுகள் அனைத்தும் உயிரற்ற சக்கை உணவுகளாக உள்ளது. அவர்களின் உடலும் சக்கையாக ஓர் கருவை உருவாக்கும் தன்மையைக் கூட  இழந்துள்ளது.

இவற்றையெல்லாம் உண்மையிலேயே கடந்து ஆரோக்கியமாகவும், தரமான வாழ்வை வாழவும் பாரம்பரிய உணவுகளுக்கு மாறுவது அவசியம்.

அதிலும் நமது உணவில் எண்பது சதவீத இடத்தைப் பிடித்துள்ள பாரம்பரிய அரிசிகளுக்கு மாறுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு தனித்தன்மையுடனும், ஒவ்வொரு விதமான நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.

பாரம்பரிய அரிசி

அவ்வாறு குழந்தையின்மை, ஆண்மையின்மை, பெண்மையின்மை போன்ற குறைபாடுகளுக்கு மாமருந்தாக அமையும் நமது பாரம்பரிய அரிசி கருங்குறுவை அரிசி.

கருங்குறுவை அரிசி நெல்

கருப்பு நெல், சிகப்பு நிறத்தில் நடுத்தரமான அளவில் இருக்கும் இந்த அரிசியின் மருத்துவகுணங்கள் மிக அதிகம். கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்று இளைய ஆண்களும் பெண்களும் சொல்லக்கூடிய அளவிற்கு வீரியம் படைத்த நமது பாரம்பரிய அரிசி இந்த கருங்குறுவை அரிசி.

கருங்குறுவை அரிசி பயன்கள்

உடலைப் பாதுகாக்கும் இந்த அரிசியினை அனைத்து வயதினரும் உண்ணலாம். சிறந்த உடல் வளத்தைக் கொடுக்கக் கூடிய அரிசி. இயற்கை முறையில் அரிசியினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விவசாயிகளின் வாழ்வியல் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திய அரிசி இந்த கருங்குறுவை அரிசி, காரணம் இந்த அரிசியின் மகத்துவம் தெரிந்தவர்கள் வீணாக எங்கு இந்த அரிசி கிடைக்கும் என்ற கேள்வியைக் கேட்காமல் இயற்கை விவசாயிகளைத் தேடி பிடித்துப் வாங்கி உண்டு தங்களின் உடலை காக்கின்றனர். 

காயகல்பமாக வேலை செய்யும் இந்த அரிசியினை விடலைப் பருவம் முதல் முதுமகன் வரை உள்ள ஆண்மகன்கள் உண்ண சிறந்த வாரிசும், தலைமுறையும் உருவாகும். பெதும்பை முதல் பேரிளம் பெண்களும் உண்ண பலவகையான கருப்பைக்கோளாறும், சுரப்பு குறைபாடும் குறைய நன்மக்களைப் பெறலாம். 

உடல் இழந்த சக்தியை மீட்டுத் தரும் அரிசியாக மட்டும் இது இல்லாமல் உடலில் ஏற்படும் அசதி முதல் கொடிய நோய்களையும் விரட்டக்கூடியதாக உள்ளது. 

இந்த சிகப்பு அரிசியினைக் கொண்டு எளிதாக பலதரப்பட்ட பலகாரங்களையும், பாரம்பரிய இனிப்பு வகைகளையும், எளிதாக உடலைக் காக்கும் கஞ்சி வகைகளையும் தயாரிக்கலாம். 

பாரம்பரிய கருங்குறுவை கருப்பு அரிசியில் தயாரித்த இட்லியின் சுவை மிகப் பிரமாதமாக இருக்கும். இட்லி மட்டுமல்ல தோசை, இடியப்பம், புட்டு, கொழுக்கட்டை, லட்டு, பாயசம், ஹல்வா என்று பலப்பல உணவு வகைகளை தயாரித்து உண்ணலாம்.

ஒரே வார்த்தையில் இந்த அரிசியினைப் பற்றி கூறவேண்டுமானால் நமது பாரம்பரிய கருங்குறுவை அரிசி நமது இந்தியன் வயகரா என்றே கூறலாம்.

பலவகையான உணவுகளில் நமது கருங்குறுவை அரிசியினை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள உடல் பலமாக இருக்கும். ஒரே வார்த்தையில் இந்த அரிசியினைப் பற்றி கூறவேண்டுமானால் நமது பாரம்பரிய கருங்குறுவை அரிசி நமது இந்தியன் வயகரா என்றே கூறலாம்.

பாரம்பரிய உணவுகளுக்கும், வாழ்வியல் முறைகளுக்கும் மாறுவதால் உண்மையான உலகத் தரமான வாழ்வினைப் பெறலாம். 

இல்லையானால் நம்மை சுற்றி உலகத் தரம் என்ற வார்த்தையும், பொருட்களும் இருக்கும் ஆனால் அவற்றை அனுபவிக்க உடல் ஒத்துழைக்காத நிலை ஏற்படும்.

(9 votes)

4 thoughts on “கருங்குறுவை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

  1. palpandian

    5 stars
    excellent information about karunguruvai rice and the present corporate domination in our personal life and its detoriation.

  2. RaKu DNA ASTROLOGER

    5 stars
    அருமையான பதிவு
    ஒவ்வொருவரின் மனிதரின் மனதிலும் பதிய வேண்டிய பதிவு. 🙏

Comments are closed.