கரிசலாங்கண்ணி கீரை – நம் கீரை அறிவோம்

கரிசலாங்கண்ணி கீரை அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை வகை. இதில் இரண்டு வகை உண்டு ஒன்று மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணி, மற்றொன்று வெள்ளை நிறப்பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணி. பொதுவாக மஞ்சள் நிறப் பூக்கள் கொண்ட கரிசலாங்கண்ணி கிடைப்பது அரிது. எங்காவது ஒரு இடத்தில் தான் இருக்கும். ஆனால் வெள்ளை நிறப் பூக்கள் இருக்கும் கரிசலாங்கண்ணி எல்லா இடங்களிலும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியது. அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது.

கரிசலாங்கண்ணியில் இரண்டு சத்துக்கள் உள்ளன ஒன்று தங்கச் சத்து மற்றொன்று இரும்புச்சத்து. இந்த இரண்டு அபூர்வமான சத்துக்கள் இந்த கீரையில் மட்டும் தான் அமைந்துள்ளது. இந்த கீரையில் பொரியல், கடையில், கூட்டு, சட்னி ஆகியவை செய்து பயன்படுத்துவார்கள். நோயற்ற ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் ஒவ்வொருவரும் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

காமாலை நோய்க்கு

காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை கைகண்ட மருந்தாகும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை சுத்தமான அம்மியில் வைத்து மைபோல் அரைத்து கொள்ளவேண்டும். பசும்பாலில் காய்ச்சி அதில் அரைத்தவற்றை சேர்த்து கரைத்து தினசரி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 15 நாட்களில் காமாலை நோய் அகன்றுவிடும்.

கரிசாலை லேகியம்

இந்த கரிசாலையை லேகியமாக தயாரித்து சாப்பிட்டால் கல்லீரல் கோளாறுகள், மலச்சிக்கல் ஆகியவை நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

ரத்த சோகை

ரத்த சோகை, பாண்டு போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் குணம்தெரியும்.

அனைத்து நோய்களும் நீங்க

மஞ்சள் கரிசாலையை கொண்டுவந்து நன்றாக உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை இரவு படுக்கப்போகும் முன் ஒரு டீ ஸ்புன் தூளை எடுத்து தேவையான அளவு கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற தினசரி சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் அணுகாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

கரிசலாங்கண்ணி தைலம்

வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை இடித்து சாறெடுத்து தைலம் காய்ச்சி தினசரி தலையில் தடவி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். மூளை வலுப்பெறும். கூந்தல் வளர்ச்சி சீராகும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணி கீரை

சில குழந்தைகள் மண் தின்று வயிற்றில் கட்டி இருந்து வயிறு பெருத்து கெட்டியாகி விடும். அதனால் ஜீரணசக்தி சரியாக இல்லாமல் அவதிப்படுவார்கள். இதற்கு இந்த கரிசலாங்கண்ணி கீரையை மைபோல் அரைத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்தால் நாளடைவில் நீங்கிவிடும்.