காட்டுயானம் முளைதானிய அடை / Kattuyanam Rice Recipe

புரத சத்துக்கள் நிறைந்த சத்தான சுவையான அடை. புரதம் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் நிறைந்தது. zinc, இரும்பு சத்துக்கள் அதிகளவில் நிறைந்தது. இந்த அனைத்து சத்துக்களும் உடல் எளிமையாக உட்கிரகிக்கும் வண்ணம் இருக்கும் அற்புதமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. நீரிழிவு உள்ளவர்கள் அவ்வப்பொழுது உட்கொள்ள விரைவில் நல்ல பல கிடைக்கும்.

மேலும் காட்டுயானம் அரிசியின் பயன்கள், நன்மைகள் தெரிந்துக்கொள்ள – காட்டுயானம் அரிசி.

காட்டுயானம் அரிசியின் சிறப்புகளை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும்.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் காட்டுயானம் அரிசி
  • ¼ கப் முளைகட்டிய பாசிப்பயறு
  • ¼ கப் முளைகட்டிய கம்பு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கொள்ளு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கேழ்வரகு
  • சிறுதுண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • ஸ்பூன் சோம்பு
  • சிறிது வெங்காயம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • சிறிது முருங்கையிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய் 

செய்முறை

  • காட்டுயானம் சம்பா அரிசியினை ஒருமணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • மற்ற பயறுகளை 8 மணிநேரம் ஊறவைத்து பின் அவற்றை ஒரு துணியில் சுற்றி முளைகட்டிக்கொள்ளவும். 

  • காட்டுயானம் அரிசி, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய கம்பு, முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய கேழ்வரகு, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்த விழுதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் முருங்கையிலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  • இந்த கலவையை அடையாக வார்த்து நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கம் சுட்டு எடுக்கவும்.
  • காட்டுயானம் முளைதானிய அடையில் அனைத்து சத்துக்களும் உள்ளது. தக்காளி சட்னியுடன் உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

காட்டுயானம் முளைதானிய அடை

புரத சத்துக்கள் நிறைந்த சத்தான சுவையான அடை. புரதம் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் நிறைந்தது. zinc, இரும்பு சத்துக்கள் அதிகளவில் நிறைந்தது. இந்த அனைத்து சத்துக்களும் உடல் எளிமையாக உட்கிரகிக்கும் வண்ணம் இருக்கும் அற்புதமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. நீரிழிவு உள்ளவர்கள் அவ்வப்பொழுது உட்கொள்ள விரைவில் நல்ல பல கிடைக்கும்.
ஆயத்த நேரம் : – 10 hours
சமைக்கும் நேரம் : – 5 hours
மொத்த நேரம் : – 15 hours

தேவையான பொருட்கள்

  • ¼ கப் காட்டுயானம் அரிசி
  • ¼ கப் முளைகட்டிய பாசிப்பயறு
  • ¼ கப் முளைகட்டிய கம்பு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கொள்ளு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கேழ்வரகு
  • சிறுதுண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • ஸ்பூன் சோம்பு
  • சிறிது வெங்காயம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • சிறிது முருங்கையிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய் 

செய்முறை

  • காட்டுயானம் சம்பா அரிசியினை ஒருமணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • மற்ற பயறுகளை 8 மணிநேரம் ஊறவைத்து பின் அவற்றை ஒரு துணியில் சுற்றி முளைகட்டிக்கொள்ளவும். 
  • காட்டுயானம் அரிசி, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய கம்பு, முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய கேழ்வரகு, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்த விழுதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் முருங்கையிலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையை அடையாக வார்த்து நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கம் சுட்டு எடுக்கவும்.
  • காட்டுயானம் முளைதானிய அடையில் அனைத்து சத்துக்களும் உள்ளது. தக்காளி சட்னியுடன் உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.