இரத்த சோகையை போக்கும் உணவுகள்

  • மாதுளம் பழம் தினமும் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
  • பேரிச்சம்பழம் சேர்த்துச் சாப்பிடலாம்.
  • வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காலையில் மூலிகை பானம் பருகுவது சிறந்தது.
  • நெல்லிக்காயுடன் கருவேப்பிலை சேர்த்து சாறு அல்லது சட்னி செய்து உண்ண பதினைந்து நாளில் நல்ல பலனை பெறலாம்.
  • நெல்லிவற்றலை வாயில் அழுத்தி வைத்துக்கொண்டு சிறிதுசிறிதாக உமிழ்நீருடன் கலந்து உண்ணலாம். நல்ல பலனை இந்த நெல்லிவற்றல் அளிக்கும்.
  • பீட்ரூட், காரட், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகள் இரும்பு சத்துக்கள் நிறைந்தவை இவற்றுடன் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளையும் சேர்த்து உண்ண இரத்த சோகை மறையும். இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக இவை இருக்கும்.
  • மிளகாய் காரம், புளியை குறைந்து சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இரத்த விருத்திக்கான டானிக்

இந்த டானிக் இரத்த சோகையை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் இரத்த விருத்தியை அளிக்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே தயாரித்து உட்கொள்ள நல்ல பலனை பெறலாம்.

  • கறிவேப்பிலை – 1/2 கப்
  • கொத்தமல்லி இலை – 1/2 கப்
  • புதினா – 1/2 கப்
  • பேரிச்சம்பழம் – 2-3
  • வெல்லம் – 4-6 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  • இஞ்சி – 1 சிறு துண்டு
  • ஏலக்காய் – 1
  • ஊற வைத்து தோல் உரித்த பாதாம் – 5
  • நெல்லிக்காய் – 2

இவை அனைத்தையும் 2 கப் நீர் விட்டு அரைத்து ஜுஸ் எடுத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து குடிக்க இரத்தம் விருத்தியாகும். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும். பதினைந்து நாளில் அனைத்து விதமான இரத்த சோகையும் முற்றிலும் மறையும்.

(1 vote)