முடி உதிர்வை தடுத்து கருப்பாக வளர

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமான ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு, நரைமுடி, இளநரை, அடர்த்தியின்மை போன்றவை. அதிலும் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் முடி உதிர்வு பிரச்சனைக்கும், நடுத்தர வயதினருக்கு ஏற்படும் இளநரைக்கும் சிறந்த பயனளிக்கும் சில கூந்தல் பராமரிப்பு வீட்டுக் குறிப்புகள்.

முடி உதிர்வை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி உதிர்வு நிற்க

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

முடி கருப்பாக

ஆலமரத்தின் இளம்பிஞ்சு, வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாக வளரும்.

முடி உதிர்வை தடுக்க

வெந்தயம் மற்றும் குன்றிமணி இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற

அதிமதுரம் 20 கிராம் எடுத்து 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தலை முடி கருமை அதிகமாகும்.