பால் – எது பால்?

தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு!

காமதேனு, கோமாதா, மஹாலக்ஷ்மி என்றெல்லாம் பாசத்தோடும் பற்றோடும் அழைக்கப்படும் பசுக்கள் உலகிற்கு வெறும் விலங்குகள் தான். தமிழருக்கும், இந்தியருக்கும் பசுக்கள் தாய்க்கு அடுத்தபடியாக போற்றி வணங்கப்படும் வீட்டில் ஒருவர்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை, வீட்டின் செல்வமாக பசுக்கள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது. பசுக்களும் கைமாறாக அந்த குடும்பத்தையே காப்பாற்றியது… ஆச்சரியமாக உள்ளதா?..

வாயில்லாத ஜீவனான பசுக்களை மனிதர்கள் காத்தனரா?. பசுக்கள் மனிதர்களை பாதுகாத்ததா? என்கிறீர்களா..

மனிதர்களை மட்டுமல்ல ஓட்டுமொத்த உலகையுமே ஒருவகையில் காப்பது பசுக்கள்தான்  என்பது நிதர்சனம்.

சுழன்று கொண்டிருக்கும் உலகில் சுழற்சி மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வாழ்வியல் நடைமுறைகள் சிலவற்றை முப்பது ஆண்டுகளுக்கு பின் நிச்சயம் செயல்படுத்துகிறோம்.

நவீனம், நாகரிகம் தொடர்ந்தாலும் அந்தக்காலத்து ஆடைகள், உணவுகள், சிகையலங்காரம், அடுமனைகள், வீடுகள் என அனைத்திலுமே நவீனமும் பழமையும் இன்று இணைவதைக் காண்கிறோம்.

அவற்றில் மிக வேகமாக மாறும் ஒருவகைக் கலாச்சாரமாக பாரம்பரிய உணவும், இயற்கை வேளான் பொருட்களின் பயன்படும் இந்த பட்டியலில் இன்று முதலிடத்தில் உள்ளது. இந்த இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது பசுக்கள் தான்.

மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஆணிவேராக என்றும் இருக்கிறது பசுக்கள். பசுக்கள் இல்லாத இயற்கை விவசாயமும், நஞ்சில்லாத உணவும் சாத்தியமில்லை. நஞ்சற்ற உணவு உற்பத்திக்கு தேவையான வளமான மண்ணை அளிப்பதும் இந்த பசுக்கள்தான்.

பசுக்கள் ஒரு நடமாடும் உரத்தொழிற்சாலை என்று பல ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

இவற்றிலிருந்து கிடைக்கும் சாணத்திற்கு ஈடு இணையற்ற உரங்களே எனலாம். இதிலிருந்து தயாராகும் உணவிற்கு தனி சுவையும், மணமும், சத்துக்களும் உள்ளது. இந்த வகை உணவிற்கு தனி சந்தையும், நுகர்வோரும் இன்று அதிகரித்து கொண்டிருக்கின்றனர். 

நமது நாட்டு மாட்டினங்கள் குறைந்ததனாலேயே விவசாயமும், மண், நீர் வளமும் குறைந்ததற்கு காரணங்கள். இதனாலேயே நமது உணவும் நஞ்சாக மாறியது.

பசுக்களில் இருந்து பலவாறாக இந்த பூமியும், ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான நஞ்சற்ற இயற்கை உணவும் கிடைக்கிறது என்பதெல்லாம் சரிதான். அதுமட்டும் தானா? நேரடியாக கிடைக்கும் பாலை மறக்க முடியுமா.

பல உயிரினங்களுக்கு முதல் உணவாக இருக்கும் பால் மனிதர்களுக்கு காலம் முழுதும் அத்தியாவசியமான உணவாகவும் இருக்கிறது.

பால் நல்லதா? கெட்டதா?.., பால் கன்றுக்கான உணவு, மனிதர்களுக்கு அல்ல.. என பல பல விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தாலும் பாலின் தேவை இன்றளவும் மிகவேகமாக அதிகரித்துள்ளது. இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் எது பால்? என்று தெரியாதது தான்..

“வெளுத்ததெல்லாம் பாலா…” என்ற நமது பழைய பழமொழியை இன்று நாம் மறந்துவிட்டோம்.

எது பால்? எங்கிருந்து பால் வந்தது? யாரெல்லாம் பாலினை அருந்தலாம்? எவ்வாறு பாலினை எந்த நேரத்தில் அருந்தலாம்?

எது பால்? எங்கிருந்து பால் வந்தது? யாரெல்லாம் பாலினை அருந்தலாம்? எவ்வாறு பாலினை எந்த நேரத்தில் அருந்தலாம்?

இவ்வாறு நமது கேள்விகள் இருந்தாலும், அதற்கான விடையை புரிந்து கொள்ளும் நிலையிலும் அதனை நடைமுறைப்படுத்தும் நிலையிலும் நாம் இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

பசு, எருமை, ஆடு, புலி பல விலங்குகளில் இருந்து பாலினைப் பெற்றாலும் பொதுவாக பால் என்றால் அது பசுவின் பாலினையே குறிக்கும்.

நாட்டுப் பசு

பசு என்பது பாலினைக் கொடுக்கும் நமது நாட்டு இன மாடுகள். நாட்டு இன பசு மாடுகளில் இருந்து பெறப்படும் பால் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதனாலேயே நமது முன்னோர்கள் அதனை வணங்கவும் அதனைப் போற்றவும் தொடங்கினர்.

அதுமட்டுமாலாது தாய்ப்பாலில் கூட தாய் உண்ட நஞ்சு பாலோடு பல நேரங்களில் கலந்து வர வாய்ப்புள்ளது ஆனால் பசுவினுடைய பாலில் எந்த நஞ்சும் கலந்து வருவதில்லை என்கிறது பல ஆராய்ச்சிகள். ஏதேனும் நஞ்சு கலந்த உணவினை நாட்டுப் பசு உண்டிருந்தாலும் பாலில் அது வெளியேறாமல் தனது கழுத்துப் பகுதியிலேயே நமது நாட்டுப்பசு அதனை தக்கவைக்கிறது.

பிறப்பு, இறப்பு என இரண்டிலும் பால் அவசியமானதாகும். பிறப்பில் தாய்ப்பாலும், இறப்பில் ‘ஆ’ வினுடைய (ஆ – பசு) பாலும் நிறைவான மண்ணுலக வாழ்வினை அளிக்கும். இவ்வளவு பெருமைகளை கொண்டது நாட்டுப் பசு மாடுகள்.

நம் நாட்டு பசுவிற்கும் இன்று அதிகளவில் பாலினைக் கொடுக்கும் அயல் நாட்டு அல்லது கலப்பின மாடுகளுக்கும் சம்மந்தமே இல்லை. 

நாட்டு பசுக்கள் என்பதற்கும் கலப்பின மாடுகளுக்கும் வேறுபாடே தெரியாத அளவு இன்றைய தலைமுறையினர் வாழ்கின்றனர். தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஓரளவிற்கு அதில் வேறுபாடு உள்ளது என்பது புரிந்தாலும் காலத்தின் நேரத்தின் கட்டாயத்தினால் அதனை முழுதாக புரிந்து கொள்ளவில்லை. 

நாட்டுப்பசுவிற்கும் கலப்பின அயல்நாட்டு மாடுகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. 

பல வீடுகளில் எந்த பாலினைப் பெறுகின்றனர் என்று கேட்டால், பசும் பாலினை தான் என்பார்கள்… பசு அதாவது நாட்டுப் பசு என்பது எது என்று தெரிந்து கொண்டால் தான் நாம் வாங்கும் பாலினைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

நாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் உள்ள வேறுபாடு

நாட்டுப் பசு மாடுகளுக்கு நீண்ட கழுத்துப் பகுதி, கொம்புகள், திமில், கட்டான உடலமைப்புகள் இருக்கும்.

அயல்நாட்டு மாடுகளுக்கு திமில், சிறு அல்லது கொம்புகள் இருக்காது. உடல் பெருத்து, மடி பெருத்தும், கனத்தும் காணப்படும்.

கலப்பின மாடு
கலப்பின மாடு

நாட்டு இனப்பசுக்கள் கடும் வெயிலையும், குளிரையும் தங்கி வாழக்கூடியது. தானாக தனது உணவைத் தேடி உண்ணக்கூடியது. எந்த விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்டது. இதன் பாலில் எந்த விஷத்தன்மைகொண்ட நச்சுக்களும் இருக்காது. 

கலப்பின மாடுகளுக்கு நமது நாட்டில் நிலவும் வெயிலை தாங்கக்கூடிய தன்மைகள் இல்லை. தானாக உணவினைத் தேடி மேயக்கூடிய இயல்பும் மந்தமாகக் காணப்படும்.

நமது நாட்டுப் பசு இனங்கள் காங்கேயம் பசு, புங்கனூர் குட்டை, ஆலம்பாடி, உம்பளச்சேரி, பெரம்பலூர் மொட்டை, தொண்டை மாடு, துரிஞ்சல் இலை, பர்கூர் செம்மரை, பாலமலை மாடு, மணப்பாறை பசு போன்றவை குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டுப் பசு இனங்கள் காங்கேயம் பசு, புங்கனூர் குட்டை, ஆலம்பாடி, உம்பளச்சேரி, பெரம்பலூர் மொட்டை, தொண்டை மாடு, துரிஞ்சல் இலை, பர்கூர் செம்மரை, பாலமலை மாடு, மணப்பாறை பசு போன்றவை குறிப்பிடத்தக்கது. அந்தந்த நிலம், நீர், தட்ப்ப வெப்ப நிலைக்கும் ஏற்றவாறு பசுக்கள் உள்ளது. 

நமது ஊரில் இறக்குமதியான நோய் மூலக்கூறினையுடைய அயல் நாட்டு ரகங்களாக ஜெர்ஸி, எச் எப் போன்றவை.  

நாட்டுமாடுகளின் பாலில் புரதம், குறிப்பாக A2 காசின் (beta-casein) புரதம், வைட்டமின்கள் (ஏ, பி2, பி3, டி, ஈ), கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளது.  நமது நாட்டு பசுவின் பாலில் நோய்யெதிர்ப்பு சக்தியும், உடலுக்கு வலுவூட்டும் தன்மையும் அதிகமாக உள்ளது. இதனை அறிந்த பல நாடுகள் A2 பால் என்று இதனை வேறுபடுத்தி விற்கத் தொடங்கியுள்ளது. இது பல நோய்களுக்கும், சத்து குறைபாடுகளுக்கும் மருந்தாக உள்ளது. எந்த விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்டது.

நாட்டுமாடுகளின் பாலில் புரதம், குறிப்பாக A2 காசின் (beta-casein) புரதம், வைட்டமின்கள் (ஏ, பி2, பி3, டி, ஈ), கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளது.  நமது நாட்டு பசுவின் பாலில் நோய்யெதிர்ப்பு சக்தியும், உடலுக்கு வலுவூட்டும் தன்மையும் அதிகமாக உள்ளது. இதனை அறிந்த பல நாடுகள் A2 பால் என்று இதனை வேறுபடுத்தி விற்கத் தொடங்கியுள்ளது. இது பல நோய்களுக்கும், சத்து குறைபாடுகளுக்கும் மருந்தாக உள்ளது. எந்த விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்டது.

கலப்பின மாடுகளில் நன்மைத் தரக்கூடிய எந்த சத்துப் பொருட்களும் இல்லை. அதிகமாக மந்தத் தன்மையும், சோம்பலையும், நாளடைவில் நோயினையும் குறிப்பாக புற்றுநோய், சர்க்கரை வியாதி, பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை, மாதவிடாய் தொந்தரவுகள், சிறுவயதில் பூபெயர்தல், உடல் பருமன், வயதிற்கு அதிக தோற்றம், ஆண்மைக்குறைவு, விந்துக்குறைவு என பலப்பல நோய்கள் வரக் காரணங்களாக உள்ளது. 

கலப்பின மாடுகளில் நோய்மூலக்கூறுகள் கொண்ட A1 புரதம் உள்ளது. அதுமட்டுமல்லாது நடைமுறையில் அதிக பாலிற்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கப்படும் இந்த கலப்பின மாடுகளுக்கு அதிக பாலினை சுரக்க செய்ய ஹார்மோன் ஊசிகள் போடப்படுகிறது.

இதனால் இந்த மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில் இந்த ஹார்மோன்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனை அருந்தும் ஆண், பெண் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது அதிகளவில் பாலினைப்பெற பேராசையாலும், பல ஊசிகளாலும் மடி கனத்து, மடியில் நோய்க்கிருமிகள் தாக்கம் ஏற்படும். இதன் வழியிலிருந்து கிடைக்கும் பாலானது பல நோயினை அருந்துபவருக்கு அளிக்கிறது. 

இதன் மூலம் எது பால்? அதாவது மனிதர்கள் தங்களின் ஆரோக்கியத்தை காக்கக் கூடிய எந்த பாலினை அருந்தலாம், அந்த பாலானது எதிலிருந்து, எங்கிருந்து பெறப்படுகிறது என தெரிந்து கொண்டோம். 

Cow, Desi Cow, Paal, Pasum paal, A2 Cow Milk, A2 Milk, Nattu mattu paal, desi cow milk, cow milk

அதுத்ததாக, பாலினை எவ்வாறு அருந்துவது… நாட்டு பசுக்கள் இன்று பெருமளவில் மறைந்து கலப்பின மாடுகள் அதிகரித்ததற்கு காரணம் வணிகமயமும், பாலின் தேவை அதிகரிப்பும் என்று பார்த்தோம்.

நாட்டு பசுக்கள் குறைந்த அளவிலேயே பாலினைக் கொடுக்கக் கூடியது. இயற்கையின் படைப்பில் பால் என்பது அந்தந்த உயிரினத்தின் குட்டிகளுக்காக என்பது விதி. அவ்வாறு இருக்க நாட்டு பசுக்களின் பால் என்பது அதன் கன்றிற்கே. அதனாலேயே நாட்டு பசுக்கள் அளவோடு தனது பசுக்களுக்கு தேவையான பாலினை சுரக்கிறது.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கன்றிற்காக சுரக்கும் பாலினை அதற்கு கொடுக்காமல் தங்களுக்கு எடுப்பது என்பது பெரும் பாவமாக எண்ணினார். கன்று குடித்தது போக மீதமிருக்கும் பாலினையே வீட்டிற்கு எடுத்தனர். அதுவும் பச்சிளம் குழந்தைக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மருந்தாக கொண்டனர். அதிலிருக்கும் மிச்சத்தையே தயிராக்கி மோருக்காக வைத்துக் கொண்டனர். 

இன்றெல்லாம் இரண்டு கப்புகள் மட்டுமல்லாது மூன்று வேளையும் பாலினை அருந்துவது போல் அன்று யாரும் அருந்தவில்லை. மருந்தாக தேவையைப்பொறுத்து அருந்தினர். அதுவும் பாலுடன் சமபங்கு நீரினை அதனுடன் கலந்தே அருந்தினர்.

சுண்ணாம்பு சத்து, எலும்பு, பற்கள் போன்றவற்றிற்காக இன்று நாம் அருந்தியும் அவை பாதிக்கப் படுகிறது என்பதை பலர் கவனிப்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை. அன்றோ அவர்கள் பாலினை குறைவாகவே அருந்தினாலும் எலும்புகளும், பற்களும் உறுதியாக இருந்தது.

இதிலிருந்து பாலினை சமபங்கு நீருடன் சேர்த்தால் அருந்த வேண்டும் என்று தெரிந்து கொள்வதுடன், பாலினை கறந்த ஆறு மணி நேரத்துக்கும் அருந்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வோம்.

பாலினை காலை உணவிற்கு முன் அல்லது இரவு உணவிற்கு பின் இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு அருந்த வேண்டும். 

மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலிலேயே இவ்வளவு வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருக்க இன்று கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் பாலின் நிலையை சற்று யோசிப்போம். 

யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, டிடர்ஜண்ட், குளுக்கோஸ், ஜெலாட்டின், மரவள்ளி மாவு, ஜவ்வரிசி, பால் பவுடர் என எதை எந்த ரூபத்தில் சேர்க்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு இன்று பாலில் கலப்பிடமும் உள்ளது. 

பாலினால் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால் நாட்டு பசுவின் பாலினை சமபங்கு நீரோடு சேர்த்து அளவோடு அன்றாடம் அருந்தலாம்.

(4 votes)