நம்ம கடை
Shop Here for Green Gifts
இந்த அழகான இயற்கை நமக்கு தேவையானவற்றை நம்மைப் படைக்கும் முன்பே தயாராக வைக்கும் என்பது இயற்கை விதி. மனித இனத்தை படைக்கும் முன்பே மனிதனுக்கு தேவையானவற்றை இந்த பிரபஞ்சம் படைத்தது. மனிதனுக்கு தேவையான உணவு, மூலிகைகள் உட்பட அனைத்துமே தயார் நிலையில் இடத்திற்கு தகுந்தவாறு வைத்துவிட்டுத்தான் மனிதனைப் படைத்தது. உதாரணத்திற்கு இன்றும் கூட சில உணவுகள், மூலிகைகளை சில இடங்களில் அங்கு இருக்கும் உயிரினங்களுக்கு தேவைகேற்ப நாம் காணலாம். உஷ்ணம் அதிகம் இருக்கும் இடத்தில் உஷ்ணத்தை போக்கும் உணவுகள், உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அதற்கேற்ப படைத்தது.
அதேப்போல் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்றால் அதற்கு தேவையான உணவை அந்த குழந்தைக்கு தேவையானவாறு தன் தாயின் மூலம் கிடைக்க வழிவகை செய்கிறது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அனைத்திலும் வேறுபட்டது. ஒவ்வொரு குழந்தையும் உடல் அமைப்பு, திறன், தன்மை, மரபணு என அனைத்துமே வேறுபட்டது. அப்பேர்ப்பட்ட அந்த குழந்தையின் முதல் உணவும் அதற்கேற்பவே பிரத்தேகமாக படைக்கப்படுகிறது இந்த இயற்கையின் துணையினால்.. அதாவது தாயின் மூலம்.

மிகவும் முக்கியமான குழந்தையின் முதல் உணவை எங்குமே நாம் விலைகொடுத்து வாங்க முடியாதவாறு குழந்தையைப் பெற்ற தாயிடம் மட்டுமே அதனைப் பெரும் வகையில் இந்த இயற்கை அந்த குழந்தைக்கான உணவை படைத்துள்ளது. அது என்ன உணவு என்கிறீர்களா? அது வேறு ஒன்றும் இல்லை, தாயிடமிருந்து கிடைக்கும் தாய்ப்பால் (mothers milk / breast milk) தான். அதிலும் முதல் தாய்ப்பால் மிகவும் விசேஷமானது. இந்த தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் முதல் உணவு. பிறந்தது முதல் ஆறு மாதங்கள் குழந்தையின் உணவாகவும் தாய்ப்பால் மட்டுமே இருக்கும்.
தாய்ப்பால் சத்துக்கள்
தாய்ப்பாலில் பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிக அளவில் எந்த உணவிலும் இல்லாத வகையில் நிறைந்துள்ளது. பிறந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே முதல் ஆறு மாதங்களுக்கு போதுமானதாகவும் உள்ளது. இன்று நாம் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகள் என பட்டியலிடும் எந்த உணவுக்கும் ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால். புரதம், தாது சத்துக்கள், உயிர் சத்துக்கள், கொழுப்பு, தண்ணீர் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது.
தாய்ப்பால் எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தை பிறந்த சில மணி நேரத்திலிருந்தே கொடுக்கலாம். சுகப்பிரசவம் பெற்ற தாய்மார்கள் சில நிமிடங்களிலேயே தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பெற்ற தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலின் ஹார்மோன் சுரப்பிகள் சீராக இயங்க உதவும். குழந்தை பேறு காலத்தில் தாயின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எளிதில் சீராக்குவது. உடல் எடை சீராகும். வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும்.
தாய்ப்பால் நன்மைகள்
- நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்
- உடல் நலத்தை ஊக்குவிக்கும்
- எலும்புகளுக்கு பலமளிக்கும்
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- மன ரீதியான பலத்தை அதிகரிக்கும்
- நோய் தொற்று மற்றும் அழற்சியிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்.