avaram-avarampoo-aavaram-poo-Senna-Auriculata-Tanners-cassia-yellow-flower-avaram-senna-flower-Cassia-Auriculata-avarampoo-benefits-in-tamil-uses-medicinal-benefits-diabetic-weight-loss

ஆவாரம் பூ

தங்கத்தை போன்று பளிச்சிடும் ஐந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி ஆவாரம் செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. விதைகள் காமத்தை பெருக்கக்கூடியது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தானாக வளரக்கூடிய செடிவகை. ஆடி மாதத்திற்குப்பின் பூக்கத் தொடங்கும் செடி இந்த ஆவாரம் பூ செடி. பெரும்பாலனவர்கள் பூஜைக்காக பயன்படுத்துவதுண்டு.

தைதிருநாள் பொங்கல் பண்டிகைக்கும் வீடுகளில் இந்த ஆவாரம் பூக்களை தமிழர்கள் வைத்து வழிபடுவதுண்டு. இதனுடைய இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய் ஆகிய அனைத்து பகுதிகளும் மருத்துவ பயனுடையவை. அதிலும் பூக்கள் அதிகளவு மருத்துவகுணம் கொண்டது.

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ
என்பது சித்தர் வாக்கு.

மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ இந்த ஆவாரம் பூ. ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.

முக அழகு

முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்க தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட களிம்புகளை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூ பொடியை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி, முகம் அழகு பெரும்.

உடல் துர்நாற்றம்

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு தோல் சார்ந்த நோய்கள் சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

avarampoo, aavaram poo, Senna Auriculata, Tanner's cassia, yellow flower, avaram senna flower, Cassia Auriculata, avarampoo benefits in tamil, uses, medicinal benefits, diabetic, weight loss

இதனையே கொண்டும் குளியல் பொடி தயாரித்தும் பயன்படுத்தலாம். பயந்தம் மாவு, ஆவாரம் பூ, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து எளிமையாக குளியல் பொடி தயாரித்து பயன்படுத்த மேனி பளபளக்கும், முகம் பொலிவுபெறும். ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

தங்கச்சத்து

ஆவாரம் பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு பூ. சாதாரணமாக தங்க பஸ்பத்தின் விலையும் அதிகம். தங்கத்தின் விலையும் அதிகம். உடலில் ஏற்படும் சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த பூக்கள்.

அன்றாடம் இந்த ஆவாரம் பூக்களை உட்கொள்வதால் மேனியே தங்க நிறத்திற்கு மாறும் என்றால் அதனை மறுக்க முடியாது.

சிறுநீரக தொற்று

சிறுநீரக தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ சாறினை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

கண்கள்

ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வர கண்களில் ஏற்படும் நோய்கள் கிருமிகள் அழிந்து கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மறையும்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தடம் கொடுக்க சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.

வயிறு, உள்ளுறுப்புகள் பலப்பட

ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும்.

பலன் அளிக்கும் ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.

ஆவாரம் பூக்களை கொண்டு பால் செய்து உட்கொள்ள வயிறு, குடல் சார்ந்த நோய்கள் குணமாகும். கோடைக்கு சிறந்த உணவாக இருக்கும் ஆவாரம் பூ பால் செய்முறையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

தொற்று நோய்

ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.

மாதவிடாய்

சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும்.

புற்றுநோய்

மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தகர்க்கும் சிறந்த மருந்தாக ஆவாரம் பூக்கள் உள்ளது. புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதும் இந்த ஆவாரம் பூக்கள்.

ஆவாரம் பூக்களை கொண்டு எளிமையாக சட்னி செய்து உண்டுவர பல நோய்கள் அகலும். ஆவாரம்பூ சட்னி செய்முறையை தெரிந்துகொள்ள இந்த காணொளியை பார்க்கலாம்.

மூலம்

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து, பொடித்து மெல்லிய துணியால் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். ஆவாரம்பூ கூட்டு செய்முறையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடிக்க அதீத தாகத்தை அது போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

(1 vote)