அத்திப் பழம்

நம் நாட்டிலும் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் கோயில்கள், சாலையோரங்கள், மலைகள் என எல்லா இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு மரவகை தான் அத்திமரம். அத்தியில் இரண்டு வகை உள்ளது. நமது நாட்டில் இருக்கும் சிறிய பழங்களைக் கொண்டது நாட்டு அத்தி மரங்கள், மற்றொன்று சீமை அத்தி. இனிப்பாகவும் பெரியதாகவும் இருக்கக் கூடியது சீமை அத்தி. இது எங்கும் பயிரிட ஏற்றது. இவற்றில் அதிக சத்துக்களைக் கொண்டது நம் நாட்டு அத்திப் பழங்கள். ஆங்கிலத்தில் அத்திப்பழத்தை ‘fig’ என்றும் இதற்கு தமிழில் ‘பிரம்ம விருட்சம்’ என்ற பெயரும் உண்டு.

அத்திப் பழத்தில் உள்ள சத்துக்கள்

  • புரதம் – 1.3 கிராம்
  • கொழுப்பு – ௦.2 கிராம்
  • நார்ப்பொருள் – 2.2 கிராம்
  • கால்சியம் – 80 மி. கிராம்
  • பாஸ்பரஸ் – 30 மி. கிராம்
  • மாவுப் பொருட்கள் – 7.6 கிராம்
  • இரும்பு – 1.0 மி. கிராம்
  • தயமின் சத்துக்கள் – 0.06 மி. கிராம்
  • ரைபோபிளேவின் – 0.05 மி. கிராம்
  • விட்டமின் சி – 5.0 மி. கிராம்
  • ஆற்றல் 60 கலோரிகள்
  • கரோட்டின் – 162 மைக்ரோகிராம்
  • நைட்ரஜன் – ௦.21 கிராம்

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அத்திப்பழங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடியது. இந்த பழத்தில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது. பாஸ்பரஸ் சத்துக்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. கால்சியம் சத்துக்கள் எறும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் குறைவாக சாப்பிட்டாலும் நன்றாக சாப்பிட மனத்தையும் சக்தியையும் அளிக்கக்கூடியது.

பொதுவாக நாட்டு அத்திப்பழங்கள் விற்பனைக்கு வருவதில்லை. சாலையோரங்களிலும், கோயில்களிலும் பெரும்பாலும் நிறைய மரங்கள் இருந்தாலும் அவை தானாக உதிர்ந்து நிறைய இடங்களில் வீணாகப் போகிறது. அத்திப்பழத்தை சூரியசக்தி உணவு என்றும் கூறலாம். இதனை காய வைத்துப் பயன்படுத்துவதால் சூரிய சக்தி நன்றாக உட்புகுந்து விடுகிறது. இதனால் இப்பழத்தினை உண்பதால் உடலானது உடனடியாக புத்துணர்ச்சி பெறுகிறது.

நாள்பட்ட நோய்களை குணமாக்க

நாள்பட்ட நோய்களை குணமாக்க அத்திப் பழங்கள் பெரிய அளவில் உதவுகிறது. நீண்ட நாட்களாக நோயாளிகளாக இருப்பவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வர நோய் நீங்கி குணம் பெறுவர். உடலுக்கு தேவையான சக்தியும் கிட்டும்.

அத்திப் பழத்தின் மகிமைகள்

அத்திப் பழத்தை உண்பதால் உதட்டுப் புண், நாக்குப் புண், வாய்ப்புண், உடல் பலவீனம் போன்றவை குணமாகும். நாள்தோறும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது. ஆஸ்துமா தொல்லை தீரும்.

இரத்த சோகையை போக்கும்

ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால் குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். சீக்கிரம் களைப்பு அடைந்து விடுவார்கள். இந்நோய் இரத்த சோகை எனப்படும். அத்திப்பழத்தில் இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இந் நோயால் அவதிப்படுபவர்கள் இரும்புச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய அத்திப்பழங்களை நாள்தோறும் சாப்பிட விரைவில் குணம் பெறமுடியும். ரத்த உற்பத்தி பெருகும்.

ஆண்மை குறைவை போக்கும்

ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பசும் பாலோடு அத்திப்பழத்தை ஜூஸ் செய்து உண்ண விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மூல நோய் குணமாக

வெந்நீரில் உலர்ந்த அத்திப்பழத்தை இரவு ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் குணமாகும்.

குழந்தை பாக்கியம் பெற

உலர்ந்த அத்திப் பழங்கள், உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும்.

சிறுநீரக பிரச்சனைகள் இருந்து விடுபட

சிறுநீரக பிரச்சனைகளை உடனே குணமாகும் அற்புத பழம் அத்திப் பழம். சிறுநீர் எளிதாகப் பிரிக்க உதவும். சிறுநீர் கற்கள் கரைந்து வெளியேற உதவும். கல்லீரல், வயிறு, குடல் போன்ற உறுப்புகள் மிக சிறப்பாக இயங்கவும் அத்திப்பழங்கள் உதவுகிறது. வறட்டு இருமலையும் அகற்றுகிறது. புதிய பழங்களை விட உலர்ந்த பழங்களில் 4 மடங்கு கூடுதலாக மாவுச் சத்தும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.

வெண்புள்ளி நோயிலிருந்து விடுபட

வெண்புள்ளி நோயால் பலர் அவதிப்படுவதுண்டு. பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த பெண்புள்ளி நோயை விரைவில் தடுக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த பழமாகும் இந்த அத்திப்பழங்கள். இந்த அத்திப் பழங்களை தொடர்ந்து உண்டு வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

புற்றுநோயை விரட்ட

அத்திப்பழம் அனைத்து விதமான புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக இருக்கக்கூடியது என ஜப்பான் ஆய்வுகள் தெரியப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் உள்ள சில சத்துக்கள் புற்றுநோய் கட்டிகளை கரைக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எலும்புகளுக்கு பலமளிக்கும்

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் பழங்கள் அத்திப்பழங்கள். முப்பது வயதிற்கு மேலுள்ள நடு வயது இளம்பெண்களுக்கு வரக்கூடிய எலும்பு மெலிவு நோய்க்கு சிறந்த ஒரு மருந்து இந்த அத்திப்பழங்கள். எலும்பு நோய்களை முன்கூட்டியே தடுக்கவும் இந்த அத்திப்பழங்கள் பெரிய அளவில் உதவுகிறது.

கொழுப்பை கரைக்க

கொழுப்பை கரைத்து உடல் நலனை காக்கும் சிறந்த ஒரு பழம் இந்த அத்தி பழம். உலர்ந்த அல்லது புதிய அத்திப் பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. அதேபோல கெட்ட கொழுப்பையும், ரத்த குழாய்களில் படியும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படாமல் இருக்க தினமும் 6 புதிய அத்திப்பழங்களை உண்டு வர நலம் பெறலாம்.

உணவிற்குப் பிறகு அத்திப் பழங்களை பழங்கள் சாப்பிடுங்கள்

அத்திப்பழத்தில் உள்ள சில சத்துக்கள் மற்றும் என்சைம்கள் உணவு சரியாக செரிமானமாக துணை புரிகிறது. எனவே உணவுக்குப் பிறகு அத்தி பழங்களை சாப்பிடுவது நல்லது.

உடல் பலப்பட

உடல் பலவீனம் பெற்றவர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டு பால் குடித்து வர உடல் பலவீனம் விரைவில் மாறும். 40 நாட்கள் சாப்பிட்டாலே போதும் உடல் பலம் பெறும்.

(1 vote)