அத்திக் காய் பயன்கள்

ஆத்தி, மிகப் பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதனுடைய இலைகள் மாற்றடுக்கில் முழுமையான இலைகளாக இருக்கக்கூடியது. பால் வடிய கூடிய வகையைச் சேர்ந்தது. தமிழகத்தில் எல்லா இடங்களிலுமே இந்த மரத்தை நாம் பார்க்க முடியும். ஆத்தி, மிகப் பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதனுடைய இலைகள் மாற்றடுக்கில் முழுமையான இலைகளாக இருக்கக்கூடியது. பால் வடிய கூடிய வகையைச் சேர்ந்தது. பலவிதங்களில் உடலுக்கு ஊட்டத்தையும், பலத்தையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான காய் இந்த அத்திக்காய்.

சாதாரணமாக சாலையோரங்களில் பார்க்கக்கூடிய ஒரு மரம் இந்த அத்தி மரம். கிராமங்களிலும் நகரங்களிலும் நிறைய இடங்களில் இதனை பார்க்க முடியும். இன்றும் நகரங்களில் பல இடங்களில் நமது அத்திமரத்தை அதாவது நாட்டு அத்தி மரத்தை நாம் பார்க்க முடியும். பல கோவில்களில் இருக்கும் மரம். இதனுடைய காய்களே அத்திக்காய்கள்.

அத்திமரத்தின் பூக்களை நாம் வெளிப்படையாக பார்க்க முடியாது. அடிமரத்தில் இருந்து கொத்து கொத்தாக காய்களை பார்க்கமுடியும். இதனுடைய காய்கள் அடிமரத்தில் இருந்து காய்க்க தொடங்கும். அத்திக்காய்கள் துவர்ப்பு சுவையைக் கொண்டது. பொதுவாக அத்திப்பழங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் பலரும் இந்த அத்திக்காயகளை பார்த்திராமல் இருக்கலாம். சமைத்து உண்ணும் காயாக இது இருந்தாலும் சந்தைகளில் பெரும்பாலும் இதனை பார்க்க முடியது.

அத்திக்காய் உணவு

அத்திக்காய் மருத்துவ குணம் நிறைந்த மகத்தான காயாகும். இதனை பருப்புடன் சேர்த்து சமைத்தும் உண்ணலாம், பொரியல், கூட்டு செய்தும் உண்ணலாம்.

கருப்பை நோய் மறைய

அத்திக்காயை உணவில் சேர்க்கும் உண்பதினால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

சீதபேதி நீங்க அத்திக் காய்

சீதபேதியால் கஷ்டப்படுகிறவர்கள் அத்திக்காயை காரம் இல்லாமல் சமைத்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

குடல் புண் நீங்க

குடல் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் இதனை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

இரத்த சோகை குணமாக

இரத்த சோகையை குணமாக்குவதிலும், ரத்தத்தை சுத்திகரிக்க செய்வதிலும் அத்திக்காய் சிறந்த ஒரு மருந்தாகும்.

உடல் உஷ்ணம் நீங்க

உஷ்ணத்தினால் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அத்திப் பிஞ்சுகளை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, லேசான காரம் சேர்த்து நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகி விடும்.

மூலநோய்க்கு அத்திக் காய்

மூலநோய் உள்ள சிலருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் சமையலில் பச்சை மிளகாய் சேர்க்காமல் இந்த அத்திக் காயை சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

குழந்தைகளுக்கு அத்திக் காய்

சில குழந்தைகளுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு இதனை சாதத்துடன் பிசைந்து அடிக்கடி கொடுத்து வந்தால் இரத்தம் கொட்டுவது நின்று விடும்.

பெண்களுக்கு அத்திக் காய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு இந்த அத்திக்காயை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலனை பெறலாம்.

ஆசனக்கடுப்புக்கு

அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை போன்றவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி தயாரித்துக் கொண்டு வைத்து காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், போன்றவை தீரும்.

(3 votes)