இரத்த சோகை

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சில பிரச்சனைகளில் இரத்த சோகையும் ஒன்று. இரத்த சோகையால் பலர் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உடலில் இருக்கக்கூடிய இரும்பு சத்து குறைபாட்டின் காரணமாக பெரும்பாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. இரும்பு சத்து குறைபாட்டினால் போதுமான அளவு ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த சிகப்பணுக்கள் உடலுக்கு பிராண சக்தியை எடுத்துச்செல்லும் ஒரு முக்கியமான காரணி. 

இரும்புச் சத்து குறைபாட்டால் பிராண சக்தியை எடுத்துச் செல்வதிலும் குறைபாடு ஏற்படுகிறது. இந்த பிராண சக்தி குறைபாட்டால் இரத்த சோகை கொண்டவர்கள், இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் விரைவாக சோர்வடைவதும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவதும், படபடப்பு மூச்சு அடைப்பு, மூச்சிரைச்சல் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. இரத்த அணுக்கள் குறைபாடு  மட்டுமில்லாமல் எல்லா நேரமும் ஒரு வகையான சோர்வுடனும் காணப்படுவார்கள். எந்த வேலையையும் செய்யப்பிடிக்காத மனசோர்வு, ஒருவகையான வெறுப்புடனும் காணப்படுவார்கள்.

இந்த இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. எளிதாக இரத்த சோகையை கண்டறிந்து கொள்ள சில வழிகள்.

இரத்த சோகையுள்ளவர்கள் அடிக்கடி மயக்க நிலைக்கு செல்வார்கள். உடல் பலவீனமாக இருக்கும். முகம், கண்கள் வெளுத்துப்போய் இருக்கும். அதிகமாக மூச்சு வாங்குவது, படபடப்பு, நெஞ்சு வலிப்பது போல் இருப்பது, தலைசுற்றல், தலைவலி, கால்கள் கைகள் குளிர்ந்த நிலையில் இருப்பது, உடைந்த நகங்கள், போதுமான சத்து இல்லாத ஒரு தோற்றம் போன்றவையாகும்.

இவற்றிற்கு காரணம் சீரான முறையற்ற உணவு. பெரும்பாலும் இந்த ரத்தசோகை குழந்தைகளையும், பெண்களையும் அதிகமாக பாதிப்படைய செய்கிறது. காரணம் அவர்களின் உணவில் போதுமான இரும்புச்சத்துள்ள உணவுகள் இல்லாதது. இரும்பு சத்துக்களை உடல் உட்கிரக்கும் தன்மை இல்லாமையும். மாதாமாதம் ஏற்படும் மாதவிடாயும் ஒருகாரணமாகும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் அதிகமாக ரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கும் காரணம் போதுமான இரும்பு சத்து இல்லாமை. மேலும் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட காரணம் அவர்களுடைய உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாததும், நோய்த்தொற்று மற்றும் சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணாததும் (பொருந்தாத உணவை உட்கொள்வது).

இரத்தசோகையால் வரக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்று பார்த்தால் இதய நோய் உள்ளவர்களுக்கு இவ்வாறான ரத்தசோகை அவர்களுடைய இருதயத்தை மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல் செயலிழக்கவும் செய்கிறது. கருவுற்றிருக்கும் தாய்மார்கள் குழந்தையை பெற்றெடுப்பதில்  சிக்கல்கள் உருவாகிறது. குறைமாத குழந்தைகள் பிறக்கவும் இது ஒரு காரணமாகிறது. பெண் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனையால் அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=2BFtOkI6r_Y

இரத்த சோகையை எவ்வாறு தடுக்கலாம்

  • போலிக் அமிலம் நிறைந்த உணவுகளான கீரைகள், மண்பானை தண்ணீர், பச்சை காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது. ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வகையான கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கொட்டைப்பருப்பு வகைகளை நீரில் ஊறவைத்து உண்பது. பாதாம் முந்திரி திராட்சை போன்ற உலர் பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
  • கொத்தமல்லி கருவேப்பிலை போன்ற எளிதாக கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. அது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான உடல் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் இந்த இரும்புச் சத்துகள் உள்ளது. இவற்றை ஒவ்வொருநாளும் காலையில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
https://www.youtube.com/watch?v=hAz9ULYFu68
  • இரும்புச் சத்தை உடலில் எளிமையாக கிரகித்துக் கொள்ள அதற்குத் துணையாக இருப்பது வைட்டமின் சி சத்து. துணை உணவு என்றுகூட சொல்லலாம்.
  • வைட்டமின் சி சத்து இரும்புச்சத்தை எளிதாக உடல் கிரகிக்க மட்டுமில்லாமல் விரைவாக இரத்த சோகையில் இருந்து வெளிவர உதவும்.
  • வைட்டமின் சி உள்ள உணவுகள் என்னென்ன என்று பார்த்தால் எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழம், தக்காளி போன்ற எளிமையாக கிடைக்கும் நமது நாட்டு பழங்களில்  வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவற்றை இரும்புச் சத்துள்ள உணவுடன் சேர்த்து உண்ணும்போது இரும்புச்சத்து குறைபாடு அதாவது ரத்த சோகையில் இருந்து எளிமையாக வெளியில் வர முடியும்.
https://www.youtube.com/watch?v=-w5UJytS8Q8
  • ஒவ்வொரு நாளும் கறிவேப்பிலை சாறு அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் 15 நாட்களில் ரத்த சோகையில் இருந்து வெளிவர முடியும்.
  • கருவேப்பிலை சாறு தயாரிக்க கருவேப்பிலை ஒரு கை அளவு எடுத்துக் கொண்டு அதனை சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பின் அதனுடன் பனங்கற்கண்டு அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பு சுவையை கலந்து அதனுடன் எலுமிச்சை சாறையும் சேர்த்து பருகலாம்.
  • வெள்ளை சர்க்கரையை தவிர்த்துவிட்டு கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை  போன்றவற்றை சேர்ப்பதும் இரும்புச்சத்து குறைபாட்டிலிருந்து வெளிவர சிறந்த வழியாகும். 
  • இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்பது சிறந்தது.
https://www.youtube.com/watch?v=H9Xl29ONQSk
(1 vote)