விநாயகர் சதுர்த்தி – வழிபாடு செய்யும் 21 இலைகள்

வினைகளை தீர்க்கும் விநாயகர் என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது அவருக்கு நாம் வைத்து வழிபாடும் அருகம்புல்லும் அவருக்கு விருப்பமான எருக்கம்பூவும். விநாயகருக்கு இவைமட்டுமல்லாமல் விநாயகருக்கு விருப்பமான இன்னும் சில இலைகளையும் வைத்து வழிபட சகல விதமான இன்னல்களும் நீங்கி வாழ்க்கையில் வளமும் உண்டாகும். கீழ்வரும் 21 இலைகளை விநாயகருக்கு அதுவும் விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வழிபட சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

பொதுவாகவே இலைகள், மலர்கள், பழங்கள் என நாம் இறைவனுக்கும் படைக்கும் ஒவ்வொரு பொருளும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாகவும் மருந்தாகவுமே உள்ளது. அவற்றை அன்றாடம் பின்பற்றவும் அவற்றின் சிறப்புகளை மறவாமல் வழிவழியாக நம் பரம்பரைக்கு அடையாளப்படுத்தவுமே ஆகும்.

விநாயகருக்கு பிடித்த விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வழிபட வேண்டிய 21 வகை பச்சிலைகளை இனி பாப்போம். இந்த 21 வகை பச்சிலைகளை வைத்து வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன் அதற்கேற்ப சிறந்த பலனையும் பெறமுடியும்.

  • 1. முல்லை இலை – வீட்டிலுள்ளவர்களின் ஒழுக்கம், அறம் வளரும். இவற்றால் நமது கர்ம வினை நீங்கப் பெறலாம்.

  • 2. கரிசலாங்கண்ணி இலை – உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் இலை, இதனை வைத்து விநாயகருக்கு வழிபட வாழ்க்கைக்குத் தேவையான பொன்னும் பொருளும் வந்து சேரும்.
  • 3. வில்வ இலை – சிவபெருமானுக்கு மட்டுமல்லாமல் விநாயகருக்கும் உகந்த இலை இந்த வில்வ இலை. இதனை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட வாழ்வில் மகிழ்ச்சியும், மனதில் விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.

  • 5. இலந்தை இலை – அறிவை மேம்பத்த இந்த இலை பூஜைக்கு உதவும். பிள்ளைகளுக்கு கல்வி மேன்மை உண்டாகும்.

  • 6. ஊமத்தை இலை – பிறருக்கு ஈயும் குணம் மேம்படும். தாராள மனம் பெருகும். மன அமைதி கிட்டும்.
  • 7. வன்னி இலை – நமது கர்ம வினைகளும், இன்னல்களும் நீங்கும். இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்திலும் கூட மகிழ்ச்சி உண்டாகும்.
  • 8. நாயுருவி இலை – உடல் பலம் மேம்படும். முகப் பொலிவு அதிகரிக்கும். உடல், மனம், உள்ளத்தின் அழகும் கூடும்.

  • 9. கண்டங்கத்தரி இலை – மனோதிடத்தை அதிகரிக்கும், மன பலத்தை மேம்படுத்தும், மன தைரியமும் வீரமும் மேலோங்கும்.
  • 10. அரளி இலை – தடைகள் நீங்கி எடுத்த அனைத்து காரியங்களும் முயற்சிகளும் கைகூடி வரும்.

  • 11. எருக்கம் இலை – வம்ச விருத்தி அதிகரிக்கும், குழந்தை பாக்கியம் பெறலாம். கருவில் உள்ள சிசு பாதுகாக்கப்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொந்தரவுகள், கட்டிகள், வியாதிகள் நீங்கும்.
  • 12. மருத இலைகள் – மருத இலைகளைக் கொண்டு பிள்ளையாருக்கு பூஜை செய்ய மகப்பேறு பாக்கியம் கிட்டும். குழந்தையின்மையை போக்கி குழந்தைபேறை அளிக்கும். பிள்ளை செல்வதை அளிக்கும், குழந்தை பாக்கியம் பெறலாம். சந்தான விருத்தி உண்டாகும்.

  • 13. விஷ்ணுகிராந்தி இலை – மானசீக புத்தி அதிகரிக்கும். நுண்ணறிவு பெருகும்.
  • 14. மாதுளை இலை – நற்பெயர் , நற்புகழ் பெறலாம். சமூகத்தில் நல்ல பெயரை அளிக்கும். எளிதில் பெரும் புகழும் நல்ல பெயரும் கிடைக்கும். பல காலமாக தடைபட்டிருக்கும் செயல்களின் தடைகள் நீங்கும்.

  • 15. தேவதாரு இலை – மன பக்குவம், மன வலிமை பெறலாம். வாழ்க்கை இன்னல்களை எதிர்நோக்கும் தைரியம் ஏற்படும். மனதைரியத்தையும் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்தும் ஞானமும் கிட்டும். எதையும் தாங்குகின்ற மன தைரியம் பெருகும்.
  • 16. மரிக்கொழுந்து இலை – இல்லறம் நல்லறமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அன்னியோன்யம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை பெருகும். இல்லற சுகம், தாம்பத்திய சுகம் அதிகமாகக் கிடைக்கப்பெறும்.

  • 17. அரச இலை – அரசனைப்போல உயர்ந்த சிறப்பையும், உயர் பதவியும் கிடைக்கும். அரச பதவியை கூட பெறலாம். கௌரவ பதவியும் கிடைக்கும். அந்த பதவியின் மூலம் வெற்றியும் உண்டாகும். வாழ்க்கை சிறக்கும்.
  • 18. ஜாதிமல்லி இலை – ஜாதிமல்லி கொடியின் இலையைக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்ய வாழ்வின் மிக முக்கிய தேவையான வீடு, சொந்த வீடு, மனை, நிலபுலன் போன்ற பூமி பாக்கியம் என சகல யோகங்களும் கிட்டும். சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் பாக்கியமும் கிடைக்கப்பெறும்.

  • 19. தாழம்பூ இலை – முற்கள் நிறைந்த தாழம்பூவின் இலைகளைக் கொண்டு வழிபட வீட்டில் பண வரவு அதிகரிக்கும், செல்வச் செழிப்பு உண்டாகும். சௌபாக்கியங்களும் அதிகரிக்கும்.
  • 20. அகத்தி இலை – கடன், வட்டிக்கடன், பித்ருகடன், தெய்வக்கடன், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் என பல கடன்களை தீர்க்கும். அன்றாடம் சிரமமான நகர்வுகளில் இருந்து வெளிவரலாம். மறுபிறவி நீங்கும். அனைத்து வித கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

  • 21. தவனம் – சிறு இலைகளான தவனத்தைக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்ய நல்ல வாழ்க்கை, நல்ல கணவன் மனைவி பெறலாம்.. குடும்ப உறவு மேம்படும், ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்பது போல் இல்லறம் நல்லறமாகும்.

அருகம்புல் மாலை அர்ச்சனை இந்த எல்லாவற்றையும் விடவும் புனிதமாகவும் விசேஷமானதாகவும் இருக்கும். விநாயகருக்கு விசேஷமான அருகம்புல் மாலையை நாமே தொடுத்து அதனில் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட சகல சௌபாக்கியங்களும் அதிகரிக்கும்.

(16 votes)