துளசி இலை கரைசல்

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது துளசி இலை கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

தாவரப் பூச்சிக்கொல்லிகள்

துளசி இலை கரைசல்

thrips, Illaipeen, Organic Fertilizer, Natural Pesticide, Iyarkai Uram, aswini poochi, kambili pochi, Herbal Pesticide, Manjal Karaisal, iyarkai poochi virati, natural pesticide, organic pesticide, sivappu silanthi
  • இரண்டு அல்லது மூன்று லிட்டர் கரைசல் தயாரிக்க 50 கிராம் துளசி இலைகள் தேவை.
  • துளசி இலையை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  • மறுநாள் காலை இந்த இலையை அரைத்து தண்ணீருடன் சேர்த்து வடிகட்டவேண்டும்.
  • வடிகட்டிய பின் செடிகளுக்குத் தெளிக்கலாம். இதை காலையில் தெளிப்பது நல்ல பலனை அளிக்கும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்

கம்பளிப்புழு, சிவப்பு சிலந்தி, புள்ளி வண்டு, செதில் பூச்சி, பழ ஈ

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(1 vote)